September 7, 2026

11 book fair sin

ஒரு மனிதன் அறிவிலும் சிந்தனையிலும் முழுமையடைவதற்கு வாசிப்பு இன்றியமையாதது. அறிவைத் தேடும் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும். வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறையிடம் வளர்ப்பதற்கு முன்னர், பெரியவர்களான நாமே வாசிப்பை எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இன்று […]

11 book fair sin Read More »

12 moolai sin

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், குறைந்த வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்கக்கூடிய வலுவான கூட்டுறவு அமைப்புகள் அவசியம். மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கு மாற்றாகவும், மக்களின் நலனை முன்னிறுத்தும் வலுவான நிறுவனங்களாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் 1926–2026 நூற்றாண்டு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மூளாய்

12 moolai sin Read More »

10 Land Mind sin

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப் பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு நேற்று (04.09.2026)

10 Land Mind sin Read More »