பண்பாட்டலுவல்கள் அலகினால் 2025 ஆம் ஆண்டு நடாத்தப்படவுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டு பெருவிழாவில் வழங்கப்படவுள்ள கலைக்குரிசில், இளங்கலைஞர், சிறந்தநூல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இவ் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமுடையவர்கள் தங்கள் பிரதேச கலாச்சார உத்தியோகத்தரைத் தொடர்புகொண்டு 2025.03.31 ஆம் திகதிக்கு முன்னர் பண்பாட்டலுவல்கள் அலகிற்குக் கிடைக்கக்கூடியவாறு விண்ணப்பிக்க முடியும். மேலதிக தகவலுக்கு 021-2054105 எனும் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும். அல்லது விண்ணப்பப்படிவங்கள் மற்றும் சுற்றறிக்கைகளை www.np.gov.lk / www.edumin.np.gov.lk எனும் இணையத்தளங்களின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
கலைக்குரிசில் விருது
இளங்கலைஞர் விருது
சிறந்தநூல் விருது