COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு

தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான திரு நோயல் செல்வநாயகம் (Chairman, SENOK Vehicle Combine Pvt. Ltd) அவர்களின் நிதிப் பங்களிப்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு அ.பத்திநாதன் அவர்களின் வழிகாட்டலின்கீழ் COVID 19 உலகளாவிய தொற்றுக் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த நலிவுற்ற மக்களுக்கான இடர்காலக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையில் இன்று (2020.05.22) பி.ப. 1.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தில் ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் திரு ஆர்.வரதீஸ்வரன் (செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வட மாகாணம்.) அவர்கள் கலந்துகொண்டார்.

மாகாண சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் கிராம அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றினூடாகத் தெரிவுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மிகவும் நலிவுற்ற 136 பயனாளிகளிற்கு 2,000 ரூபா வீதம் 272,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது.