ஆளுநர்

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, பெரும்பாலான மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களின் செலவில் நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன. இது உயர்தரக் கல்வியை எமது சமூகம் இலகுவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில், சிகரம் அக்கடமி மற்றும் சேப் (SAPE) நிறுவனம் இணைந்து நடாத்திய ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) கல்வி வழிகாட்டல் கண்காட்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் […]

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை, குறைந்த செலவிலேயே வழங்குகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டினார். Read More »

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (18.01.2026) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.கே.பிரேமதிலக தலைமையில் நேற்று சனிக்கிழமை மதியம் ஆரம்பமான இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள்

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன Read More »

“விவசாயம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் இணைந்து பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்ற வேண்டும்!” – மன்னாரில் ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல்

எதிர்காலத்தில் வடக்கு மாகாணக் கல்வி மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சு, மாகாண சுற்றுலாப் பணியகம், மற்றும் விவசாய அமைச்சு ஆகிய மூன்று முக்கிய அமைச்சுக்களும் துறைகளும் ஒன்றிணைந்து, தைப்பொங்கல் பண்டிகையை வடக்கு மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ கொண்டாடுவது சிறப்பாக அமையும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாணப் பொங்கல் விழா – 2026’ இன்று ஞாயிற்றுக்கிழமை

“விவசாயம், சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறைகள் இணைந்து பொங்கலை மாகாணத்தின் ‘முதன்மைப் பெருவிழாவாக’ மாற்ற வேண்டும்!” – மன்னாரில் ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சாதனைத் தமிழன்’ 2025 விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

டான் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிவரும் ‘சாதனைத் தமிழன்’ விருது வழங்கும் நிகழ்வின் 2025 ஆம் ஆண்டுக்கான விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நேற்று (17.01.2025) இரவு டான் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சிறப்பு நிகழ்வின் போது இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,

டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ‘சாதனைத் தமிழன்’ 2025 விருது வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. Read More »

‘போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையின் தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்’ என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இம்மாபெரும் மக்கள் பேரணியில் மாண்புமிகு ஜனாதிபதி, அமைச்சர்களுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

‘போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: வட, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பம்! – சாவகச்சேரியில் ஜனாதிபதி அங்குரார்ப்பணம்

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின்

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: வட, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பம்! – சாவகச்சேரியில் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் Read More »

எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஜனாதிபதியின் வருகை உந்துசக்தியாக அமையும்!” – மானிப்பாய் ‘பொங்கல் சங்கமம்’ நிகழ்வில் ஆளுநர் பெருமிதம்

எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் தைப்பொங்கல் பண்டிகையில், நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நேரில் கலந்து கொள்வதானது, எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதோடு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவே அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் சங்கமம் – 2026’ நிகழ்வு, இன்று (15.01.2026) வியாழக்கிழமை

எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஜனாதிபதியின் வருகை உந்துசக்தியாக அமையும்!” – மானிப்பாய் ‘பொங்கல் சங்கமம்’ நிகழ்வில் ஆளுநர் பெருமிதம் Read More »

தை பிறந்தால் வழி பிறக்கும்; ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!” – வேலணை பொங்கல் விழாவில் ஆளுநர் பெருமிதம்

எமது மக்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். பெரும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கின்றார்கள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது எமது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த அடிப்படையில், எமது மக்களின் எதிர்பார்ப்புகளும் இக்காலப்பகுதியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் முழுமையாக நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட

தை பிறந்தால் வழி பிறக்கும்; ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!” – வேலணை பொங்கல் விழாவில் ஆளுநர் பெருமிதம் Read More »

மன்னாரில் 50 மெகாவாட் ‘ காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்’ (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15.01.2026) மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது. ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத்

மன்னாரில் 50 மெகாவாட் ‘ காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. Read More »

ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதுக்கான யாழ்ப்பாண மாவட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை (14.01.2026) மாலை நடைபெற்றது. யாழ்.

ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு Read More »