தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் புதிய தொழில் முயற்சியாளர்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அரசாங்கம் உற்பத்திப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்ற போதிலும், அத்தகவல்கள் உரிய காலத்தில் தொழில் முயற்சியாளர்களைச் சென்றடைவதில்லை என்ற […]
