முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பேரூந்து போக்குவரத்துச் சேவைக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான நேரடி களப் பயணத்தை மேற்கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை (18.02.2026) காலை இடம்பெற்ற மக்கள் குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். இதன்போது மக்களின் கோரிக்கைகளில் உடனடியாக நிறைவேற்றக் கூடியவற்றை விரைந்து செயற்படுத்துவதற்கும், ஏனையவற்றை உரிய கால அவகாசத்தில் நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார். மேலும், முல்லைத்தீவு மாவட்டச் […]
