ஆளுநர்

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை

2026ஆம் ஆண்டு அபிவிருத்திக்குரிய ஆண்டு. எனவே, அதிகாரிகள் ‘அபிவிருத்தி நிர்வாகத்தை’ முன்னெடுக்கத் தயாராக வேண்டும். சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், இன்று […]

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை Read More »

விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. மாகாண சபைக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட நிதியைக் கடந்து, மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்து எவ்வகையில் மேலதிக நிதியையும், உதவிகளையும் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், மாகாணத் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் துறைசார் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

‘மக்களுக்காகத்தான் உங்கள் பணியே தவிர, உங்கள் பணிக்காக மக்கள் இல்லை’ – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாகச் செய்தால் அவர்கள் மனதில் நீங்கள் நிச்சயம் இடம்பிடிப்பீர்கள். அவர்கள்தான் உங்களை மதிப்பிடுபவர்கள் – கண்காணிப்பவர்கள். உங்களிடம் வந்தால் சேவையை திருப்தியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகும் வகையில் உங்கள் சேவை அமையும் என நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 114 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும்

‘மக்களுக்காகத்தான் உங்கள் பணியே தவிர, உங்கள் பணிக்காக மக்கள் இல்லை’ – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த வருடம் 2,726 மில்லியன் ரூபா செலவில் 1,363 புதிய வீடுகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் இவ்வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் கௌரவ அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.

கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள நான்கு வழிப்பாதையை மேலும் விஸ்தரிப்பது குறித்தும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் வகையில் வீதிச் சமிஞ்சை விளக்குகளைப் பொருத்துவது குறித்தும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (11.02.2026) மாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கலந்துரையாடலில்

கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது. Read More »

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வளம் நிறைந்தும் வறுமையில் முதலிடம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டம், இந்த அரசாங்கத்தின் காலத்தில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக மிகப் பெரிய அபிவிருத்தியை அடையும். அதற்கான அடிப்படைத் திட்டங்கள் மற்றும் கட்டுமானங்கள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (11.02.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் Read More »

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது. நான் யாழ். மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தில் எவையெல்லாம் சாத்தியமற்ற கனவுகளாக இருந்தனவோ, அவை இன்று இக் காலப்பகுதியில் நனவாகி வருகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின்

‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு Read More »

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் புதிய பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபைகளுக்குரிய வழமையான நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்கள் ஊடாகவும் நிதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் தேவைகளை நிவர்த்தி செய்ய, மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று

மத்திய சுகாதார அமைச்சிலிருந்து மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை Read More »

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மாணவர்களுக்கான வாழ்க்கை திறன் பயிற்சி மற்றும் பெற்றோர்களுக்கான பெற்றோர் திறன் பயிற்சி ஆகியனவற்றை வழங்கும் மனோஹரி திட்டத்தை வடக்கு மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கும் விரிவாக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாடு தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்படும் மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் Read More »

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளபோதும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று செவ்வாய்க்கிழமை (10.02.2026) வடக்கு

பாடசாலை மாணவர்களிடம் மறைமுகமான நிதி அறவீடுகளைக் கண்காணித்து நிறுத்த வேண்டிய பொறுப்பு கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »