ஆளுநர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் தனித்துவமான பண்பாட்டுப் பெருவிழாவாகவும், உழவர் திருநாளாகவும் போற்றப்படும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். பயிரினங்கள் செழித்து வளர்வதற்குப் பெருத்துணை நின்ற சூரிய பகவானுக்கும், சேற்றில் கால் பதித்துச் சோற்றுப் பயிர் விளைவிக்கும் எமது உழவர் பெருமக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு உன்னதமான நாளாகவே இந்தத் திருநாள் அமைகின்றது. இயற்கையோடு இயைந்த வாழ்வியலைக் கொண்ட […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி Read More »

“பொலிஸார் மற்றும் படையினரால் மாத்திரம் போதைப்பொருளை ஒழிக்க முடியாது; மக்களின் பங்களிப்பே பிரதானம்!” – கிளிநொச்சியில் ஆளுநர் வலியுறுத்தல்

உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைத் தனித்து முப்படையினர் மற்றும் பொலிஸார் மாத்திரமே மேற்கொண்டுவிட முடியாது. இந்த நடவடிக்கையில் பொதுமக்களும் கைகோர்க்க வேண்டும். அதன் மூலமே எங்கள் எதிர்காலச் சந்ததியைப் பாதுகாக்க முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதற்கான கிளிநொச்சி மாவட்டக் கலந்துரையாடல் இன்று புதன் கிழமை (14.01.2026) காலை

“பொலிஸார் மற்றும் படையினரால் மாத்திரம் போதைப்பொருளை ஒழிக்க முடியாது; மக்களின் பங்களிப்பே பிரதானம்!” – கிளிநொச்சியில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக எஸ்.விமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (14.01.2026) வழங்கினார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றார். 19.01.2026 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது!” – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டுள்ளனர். இவ்வரசாங்கம் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) அவர்களிடம் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்யூ டக்வொர்த், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (12.01.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பலாலியில் அமைந்துள்ள

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது!” – அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் சுட்டிக்காட்டல் Read More »

“விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க யாழ்ப்பாணத்திலிருந்தே நேரடி ஏற்றுமதி!” – சுங்கத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பு

யாழ்ப்பாணத்திலிருந்தே ஏற்றுமதி நடவடிக்கைகளை நேரடியாக முன்னெடுப்பதுக்குரிய ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இலங்கைச் சுங்கத் திணைக்களம் தயாராக உள்ளது, என அதன் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உறுதியளித்தார். வடக்கிலிருந்து நேரடியாக ஏற்றுமதிச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்குக் கடிதம் மூலம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அக்கோரிக்கைக்கு அமைவான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (12.01.2026) மாலை நடைபெற்றது.

“விவசாயிகளின் இலாபத்தை அதிகரிக்க யாழ்ப்பாணத்திலிருந்தே நேரடி ஏற்றுமதி!” – சுங்கத் திணைக்களம் பூரண ஒத்துழைப்பு Read More »

“டித்வா” சூறாவளி நிவாரணம்: அரச சாரதிகள் சங்கம் நிதியுதவி! – ஆளுநரிடம் காசோலை கையளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நிதியத்துக்கு வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் தங்களது உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்ட 50,000 ரூபா பணத்தை வைப்பிலிட்டு அதன் ஆவணத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று திங்கட் கிழமை (12.01.2026) ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தனர். இந்த ஆவணம் ஜனாதிபதி செயலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“டித்வா” சூறாவளி நிவாரணம்: அரச சாரதிகள் சங்கம் நிதியுதவி! – ஆளுநரிடம் காசோலை கையளிப்பு Read More »

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல்

2025ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது வேலைத்திட்டங்களை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தோம். 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2026ஆம் ஆண்டில் அத்தகைய சவால்கள் எமக்கு மிகக் குறைவு. எனவே, இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 2026ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண சபையின் பாதீட்டுப் புத்தகத்தை (நிதிக்கூற்று) உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) காலை

“இந்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை ஓகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும்!” – 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுப் புத்தக வெளியீட்டில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு

வெளிநாட்டுச் சுற்றுலாவிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாவிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார். இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (05.01.2026)

“வடக்கு மாகாணம் சுற்றுலாவிகளுக்குப் பாதுகாப்பான பிரதேசம்; ரஷ்ய முதலீடுகளையும் வரவேற்கின்றோம்!” – ரஷ்யத் தூதுவரிடம் ஆளுநர் தெரிவிப்பு Read More »

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்திலிருந்து சுதேச வைத்தியத்துறைக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவை எமது மாகாணத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையை அடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சில் இன்று சனிக்கிழமை (03.01.2026) மதியம் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர்

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்கள் மற்றும் அவற்றில் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று சனிக்கிழமை (03.01.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »