“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை
2026ஆம் ஆண்டு அபிவிருத்திக்குரிய ஆண்டு. எனவே, அதிகாரிகள் ‘அபிவிருத்தி நிர்வாகத்தை’ முன்னெடுக்கத் தயாராக வேண்டும். சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், இன்று […]
