*இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
வடக்கு மாகாண விவசாயத்தின் உயிர்நாடியாகத் திகழும் இரணைமடு குளத்தை கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார். இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பிரதமர், அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் இரணைமடு குளத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் குளத்தின் நீர் முகாமைத்துவம் மற்றும் பயன்பாடு […]
