ஆளுநர்

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்கள் தங்களது கல்விக்கு மேலதிகமாக கலை மற்றும் விளையாட்டுக்களில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கின்றன. இவ்வாறான மேலதிக செயற்பாடுகளில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதன் ஊடாகவே, தங்களின் தலைமைத்துவம் உள்ளிட்ட நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு விளையாட்டுத் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய ‘வடக்கு மாகாண […]

‘வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் – 2026’, உடுப்பிட்டி இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் இன்று (16.04.2026) வியாழக்கிழமை நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகளை முன்னெடுத்தனர். நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் ஆரம்பக் கட்டமாக, சூரிய சக்தியூடான மின் உற்பத்திப் பணிகள் விரைவில் நிறைவு

கௌரவ ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் நெடுந்தீவுப் பிரதேச மருத்துவமனை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தித் திட்டம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டனர் Read More »

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில், உங்கள் பிரதேசத்தின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான முழுமையான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. ஒரே நாளில் அனைத்தையும் செய்து முடிப்பதற்கு எங்களுக்கும் விருப்பம் இருந்தாலும், நடைமுறையில் அதனைப் படிப்படியாகவே முன்னெடுக்க முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில், நெடுந்தீவு

நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலா தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது Read More »

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குழு உருவாக்கம்

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும், பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முதற்கட்டக் கலந்துரையாடல், இன்று (15.04.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் வருமாறு: மாகாண சபை நிர்வாகத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும்

பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரிக்க ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட குழு உருவாக்கம் Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது

தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது Read More »

எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன்

எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலரும் சித்திரைப் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இயற்கையோடு இணைந்ததாக, சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, எமது பாரம்பரியத்தோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஓர் உன்னதத் திருநாளாகும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒரே நன்னாளில் இணைந்து கொண்டாடும் இப்பண்டிகையானது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பரஸ்பர

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்க தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்

வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்க தீர்மானம் Read More »

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில்

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை Read More »

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி அந்த வகையில் மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தப் பழைய மாணவர்களின் அளப்பரிய பங்களிப்பின் ஊடாகவே இக்கல்லூரி கல்வியிலும் பௌதீக வளத்திலும் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, கல்லூரி

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர் Read More »