இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றில் முதற்தடவையாக, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இலவச ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவை ஆரம்பம்
இலங்கை அரச மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதற்தடவையாகக் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘செயற்கை முறை கருக்கட்டல்’ (ஐ.வி.எவ்.) சேவையின் முன்னேற்றங்கள் மற்றும் அதற்கான அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (25.06.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இலங்கையிலேயே முதல் தடவையாக அரச மருத்துவமனையொன்றில் செயற்கை முறை கருக்கட்டல் சேவையை முழுமையாக […]
