ஆளுநர்

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு […]

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read More »

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.06.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட் கிழமை (15.06.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். Read More »

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார். 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத்

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தயாராகவுள்ளது. எனவே, அதற்கான கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தங்குமிட விடுதி கட்டுமான வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள்

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாணத்திலுள்ள ஆதார மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், சத்திரசிகிச்சைக் கூடங்களை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நோயாளர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் உட்கட்டமைப்புத் திருத்த வேலைகளுக்காக ஆசிய

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ் மாவட்டத்தில், குளங்களைத் தூர்வாருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இந்த ஆண்டு எதிர்வரும் ஜூலை மாதத்தில் மீள ஆரம்பிப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குளங்களைத் தூர்வாருவது தொடர்பான இந்த விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் முன்னெடுக்கப்பட்ட தூர்வாரும் செயற்றிட்டத்தின் மூலம் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் குறித்தும், அச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட

யாழ் மாவட்டத்தில், குளங்களைத் தூர்வாருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரின்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துரிதகதியில் இடம்பெற்று வரும் இந்தச் சீரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான விசேட குழுவினர் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். ‘டித்வா’ பேரிடரின் கோரத்தாண்டவத்தால், பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் ஒரு பகுதியில் காணப்பட்ட

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் Read More »