ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் […]

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம், மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் நன்னடத்தை, சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த விசேட துறைசார் மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (22.04.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் இவ்வாண்டு முக்கிய அபிவிருத்திப் பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு ஊடாக 2026ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த துறைசார் மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

ஏனைய மதங்களுக்கு இருப்பதைப் போன்று, சைவ சமயத்துக்கும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் முதலாவது குருபூசை வைபவம், சித்திரைத் திருவாதிரை நாளான இன்று (22.04.2026) புதன்கிழமை காலை நல்லை ஆதீனத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்

சைவ சமயத்துக்கு பிணக்குகளைத் தீர்ப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அதிகாரமுள்ள உறுதியான பீடம் அல்லது சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் -கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

பலாலி விமானப்படைத் தளபதி மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

பலாலி விமானப்படைத் தளபதி குரூப் கப்டன் டி.எஸ்.எஸ்.சுரங்க செனவிரத்ன மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சம்பிரதாயபூர்வ சந்திப்பொன்று இன்று (22.04.2026) புதன்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இருவருக்குமிடையே மிகவும் சுமுகமான முறையில் அமைந்திருந்த இந்தச் சந்திப்பில், சமகால நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

பலாலி விமானப்படைத் தளபதி மற்றும் ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. – கௌரவ ஆளுநர்

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் காட்டாத அக்கறையையும் கரிசனையையும் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமே காண்பிக்கின்றது. இந்தத் தீவகப் பகுதி மக்கள் எதிர்பார்த்திராத பல மிகப் பெரிய அபிவிருத்திகள் இனி நடக்கும். அந்த நல்ல மாற்றங்களை இங்குள்ள மக்கள் விரைவில் அனுபவிப்பார்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, 984 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தில்

குறிகாட்டுவான் இறங்குதுறைப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, எமது மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும் நன்னாளாக அமைகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதி பெற்ற மாணவர் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்காக உழைத்த அனைவரையும் பாராட்டும் அதேவேளை, இந்த இடத்தை எமது மாகாணம் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்பும், அடுத்த ஆண்டு இவ்வீதத்தை மேலும் அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொருவரும் மனதிலிருத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின்

இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதி பெற்ற மாணவர் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. Read More »

‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, கௌரவ ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்ட ‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட பங்கேற்புடன் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை காலை அந்நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 17 பட்டியலிடப்படாத பொதுக் கம்பனிகளில் ஒன்றான இந்நிறுவனம், தனது பங்குதாரர்களாக உள்ள

‘2கே அக்ரோ புரொடக்ட்ஸ் லிமிடெட்’ (2K Agro Products Ltd) நிறுவனத்தின் புதிய உற்பத்திப் பொருளான ‘வேர்கடலை பிஸ்கட்’ அறிமுக நிகழ்வு, கௌரவ ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது. Read More »

கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சென்று நேரில் பார்வையிட்டார்

பல தசாப்தங்களாகத் தூர்வாரப்படாமல் காணப்பட்டமையால், மழைக்காலங்களில் மக்கள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர்களைச் சந்திப்பதற்குக் காரணமாக அமைந்த வாய்க்கால்களைத் தூர்வாரும் விசேட செயற்றிட்டம் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான 1.5 கிலோமீற்றர் நீளமான பிரதான வாய்க்காலைத் தூர்வாரும் பணிகளை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் இன்று (21.04.2026) செவ்வாய்க்கிழமை இரத்தினபுரம் பகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்டனர்.

கனகாம்பிகைக்குளத்திலிருந்து கிளிநொச்சிக்குளம் வரையிலான பிரதான வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் சென்று நேரில் பார்வையிட்டார் Read More »

யாழ் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை இன்று (20.04.2026) திங்கட்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், கௌரவ ஆளுநருடனான முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது. இச்சந்திப்பின்போது இருவருக்குமிடையே சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், புதிய பதவியைப் பொறுப்பேற்றுள்ள கட்டளைத் தளபதிக்குக் கௌரவ ஆளுநர் அவர்கள் தனது

யாழ் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும். – கௌரவ ஆளுநர்

தனியார் கல்வி நிறுவனங்களை நாடாமல், போதிய ஆசிரியர் வளங்களற்ற வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞானத்துறையில் (உயிரியல், இணைந்த கணிதம்) பயிலும் பின்தங்கிய தமிழ் மாணவர்களுக்கு, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்தி மூன்று நாட்கள் தங்கியிருந்து கற்கும் அரிய வாய்ப்பை வழங்கிய அதிபர் இ.செந்தில்மாறன் உள்ளிட்ட பாடசாலைச் சமூகத்தினருக்கும், இதற்கு உறுதுணையாக நின்ற சங்காரவேல் நிதியத்துக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கடந்த

பின்தங்கிய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் பல்கலைக்கழகம் தெரிவானால், அது அந்தக் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வித்திடும். – கௌரவ ஆளுநர் Read More »