ஆளுநர்

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம்

வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களான குருக்கள்புதுக்குளம், கந்தசாமிநகர், கப்பாச்சி, வீரபுரம் மற்றும் நித்தியநகர் உள்ளிட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (05.06.2026) நேரடியாக பயணம் செய்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், பல நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார். இந்த விசேட களப் பயணத்தில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற […]

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் Read More »

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சபையின் வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவாக்கிக் கொள்ள முடியும் எனவும், எனவே வருவாய் ஈட்டக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் தமக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’, வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் வெசாக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட செய்திகள் முற்றுமுழுதான பொய் என்பதை வவுனியாவில் நடைபெற்ற இந்த வெசாக் உற்சவம் தெளிவாக நிரூபித்துக் காட்டுகின்றது. பொய் பரப்புபவர்கள் வார்த்தைகளால் பிரிக்க முயல்கிறார்கள், நாம் செயலால் இணைகிறோம்; அதுவே எமது பதில், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்ட

வடக்கு மாகாண வெசாக் உற்சவம்’, வவுனியா, பரக்கும் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. Read More »

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக பல்வேறு மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், மேலும் பல திட்டங்கள் தற்பொழுது பரிசீலனையில் உள்ளன. இதற்காக இந்தியாவுக்கு வடக்கு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில் இந்திய அரசாங்கத்தின் விசேட நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய அமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகக் கையளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது Read More »

யாழ். மாவட்டத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை கௌரவ ஆளுநர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (30.05.2026) சனிக்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை ஒளிரச் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்த ஆளுநர், ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தினராலும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களையும் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’

யாழ். மாவட்டத்தில் வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்களை கௌரவ ஆளுநர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், வெசாக் செய்தி

கௌதம புத்த பெருமானின் மூன்று புனித நிகழ்வுகளையும் — பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணம் — நினைவுகூரும் வெசாக் திருநாளை முன்னிட்டு, வட மாகாணத்தில் வாழும் அனைத்து பௌத்த சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பௌத்த தர்மம் என்பது காலத்தை வென்று நிலைத்திருக்கும் அமைதியின் போதனையாகும். அன்பு, கருணை, மகிழ்ச்சி மற்றும் சமநோக்கு என்ற நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டு, கௌதம புத்த பெருமானால் போதிக்கப்பட்ட இந்த தர்மம் இன்றும் உலகம் முழுவதிலும் வழிகாட்டும் ஒளியாக

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், வெசாக் செய்தி Read More »

“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர்

ஒரு கிராமத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி என்பன, அக்கிராமத்தில் இயங்கும் அடிமட்ட அமைப்புகளின் சிறப்பான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். இளவாலை ‘எழுச்சியகம்’ மக்கள் வலுவூட்டல் மையத்தின் 15ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கௌரவ ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “அடிமட்ட அமைப்புகள் எவ்வளவு சிறப்பாக இயங்குகின்றனவோ, அப்போதே அக்கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான

“அடிமட்ட அமைப்புகள் சிறப்பாக இயங்கும் போது கிராமத்தின் வளர்ச்சியில் நாம் காத்திரமான வேறுபாட்டைக் காண முடியும் – கௌரவ ஆளுநர் Read More »

சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களின் உண்மைத்தன்மையையும், அதன் பின்னணியையும் தீர்க்கமாக ஆராய்ந்த பின்னரே அவற்றிற்கு விருப்பம் தெரிவிக்கவோ அல்லது பகிரவோ வேண்டும். சமூக ஊடகங்களில் வரும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்புவதால் சமூகத்தில் பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூகம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், வடமாகாண இளையோர் மற்றும் சிறுவர் பங்கேற்புக்கான விசேட மதிப்பளித்தல் நிகழ்வு, யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையுடன் ‘சொண்ட்’

சமூக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்கள் தொடர்பில் இளம் சமுதாயத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் அதீத அவதானத்துடன் செயற்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகள் மிகுந்த பக்தியுடனும் பணிவுடனும் கொண்டாடும் ஹஜ் பெருநாளான ‘ஈதுல் அழ்ஹா’ திருநாளை முன்னிட்டு, வட மாகாண முஸ்லிம் சமூகத்தினருக்கும் என்னுடைய அன்பான, மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஹஜ் பெருநாளானது, இப்ராஹீம் நபி அவர்களது உன்னத தியாகத்தையும், அசைக்க முடியாத இறைநம்பிக்கையையும் நினைவுகூரும் மிகவும் புனிதமான, ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த திருநாளாகும். தமக்குச் சொந்தமான அனைத்தையும் இறைவனின் விருப்பத்துக்காக அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது. வட மாகாணம்,

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி Read More »