ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்குரிய வணிக இணைப்பை ஏற்படுத்தும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று […]

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ். மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தல்

மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில்

மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ். மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தல் Read More »

ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடாத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ஆளுநர் செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வினைத்திறனான செயற்பாடுகள், ஆவணப்படுத்தல் நடைமுறைகள்

ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இம்முறை மத்திய அரசாங்கத்தின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலும், எதிர்காலத்தில் மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கே எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட கல்வித் துறை மற்றும் பட்டதாரிப் படிப்புகள் பீடம் ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது சர்வதேச கல்வி மாநாட்டின் ஓர் முக்கிய அங்கமாக, ‘வடக்கு மாகாணத்தில் க.பொ.த. (சாதாரண தர) அடைவு மட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான

மாகாண சபையின் ஊடாக ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் போது, மாவட்ட ரீதியிலான நியமனங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான காணிகளை உடனடியாக அடையாளப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்துக்குப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை நேற்று (17.07.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக்

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினார். Read More »

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

‘நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில்

முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தர பதவியுயர்வு நியமனங்கள், வருமான வரிப் பரிசோதகர்கள், மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்துடன், இந்நிகழ்வின் சிறப்புப் பேச்சாளராக பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் பங்கேற்றிருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆடிப்பிறப்புப் பெருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More »

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவி ஊற்றுக்குளத்தில் இந்தத் தேசிய வேலைத்திட்டம் அமைச்சர் கௌரவ கே.டி.லால்காந்த அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான புனரமைப்புப் பணிகளை 75 நாட்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் குளத்தின் கீழ்

சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்யும் ‘வாரி மஹிம – எமது பாரம்பரியம்’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இ.சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவையானது, கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »