வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் அபிவிருத்தி திட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் […]
