ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் கடலோரப் பகுதிகளில் தென்னங்கன்றுகளை நடுகை செய்வது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தென்னை பயிர்ச்செய்கை சபையின் உதவிப் பொதுமுகாமையாளர் ரி.வைகுந்தன், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட தென்னை முக்கோண வலயச் செயற்றிட்டத்தின் […]

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தென்னை முக்கோண வலயத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ். மாவட்டத்தின் 2026ம் ஆண்டுக்குரிய முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.03.2026) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைவராகவும், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் இணைத்தலைவராகவும் தலைமை தாங்கினர். யாழ்ப்பாண மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்புக்குழுவின் செயலாளருமான ம.பிரதீபன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் சமகால சவால்கள் தொடர்பில்

யாழ். மாவட்டத்தின் 2026ம் ஆண்டுக்குரிய முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. Read More »

மன்னார் மாவட்ட சின்னவலையன்கட்டு, பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களப் விஜயம் மேற்கொண்டார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் காணப்படும் சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், மக்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த திட்டங்களைப் பரிசீலித்து அவர்களின் தொழில் மேம்பாட்டுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டம், மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட சின்னவலையன்கட்டு மற்றும் பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (26.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப்

மன்னார் மாவட்ட சின்னவலையன்கட்டு, பரசன்குளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களப் விஜயம் மேற்கொண்டார். Read More »

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. – மன்னாரில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்

தங்களை மென்மேலும் மேம்படுத்தி, பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைவதில் உண்மையான ஆர்வத்துடன் இருக்கும் மக்களுக்குத்தான் அரசாங்கத்தால் உதவ முடியும். மாறாக, அரசாங்கம் வழங்குபவற்றை மாத்திரம் பெற்றுக்கொண்டு சோம்பேறிகளாக இருக்க நினைப்பவர்களுக்கு எந்தவித உதவியும் செய்ய முடியாது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் மக்கள், தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்தித் தமது கிராமத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் காட்டும் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. – மன்னாரில் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார் Read More »

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

“எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் புதிய பற்சிகிச்சைப்

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது Read More »

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயத்துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவதுடன், மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான அதிமுக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை காலை (25.03.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் தேசிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் மிக

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24.03.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். Read More »

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை

எந்தவொரு உற்பத்தியாளரினதும் உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்கள் உழைத்துச் செல்வதற்கு இடமளிக்காமல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்போதே எமது மாகாணம் முழுமையாகத் தன்னிறைவடைய முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (21.03.2026) மாலை, மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும்போதே

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை Read More »