ஆளுநர்

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அந்த அமைப்பின் கீழ் இயங்கி வரும் 5 வௌ;வேறு இல்லங்களுக்கும் நேரில் பயணம் செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களைச் சந்தித்து அவர்களின் நலன்களைக் கேட்டறிந்துகொண்டார். இதன்போது, குறித்த அமைப்பின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில் […]

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

ஒரு மாத காலமாகப் புனித நோன்பு நோற்று, இறை பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்துடன் அதனை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் வடக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். ரமழான் பண்டிகையானது வெறுமனே உணவையும் தாகத்தையும் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பொறுமை, தியாகம், சகோதரத்துவம் மற்றும் சக மனிதர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் உன்னத மனிதாபிமானப் பண்புகளை வலியுறுத்துகின்றது.

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி Read More »

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத்

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். Read More »

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார்.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை Read More »

பாடசாலை மாணவர்களுக்கான பைபிள் விநியோகம் தொடர்பில் கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தல்கள்

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் அவர்களுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்கான பைபிள் விநியோகம் தொடர்பில் கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தல்கள் Read More »

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிராந்திய மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும், வவுனியா மற்றும் தெல்லிப்பளைக்கு விசேட தர ஆளணியை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்க மருந்தாளர் சங்கத்தினரால் ஆளுநரிடம் கோரிக்கைகள்

இலங்கை அரசாங்க மருந்தாளர் சங்கத்தினருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது Read More »

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகின்றது. தலைமைத்துவப் பண்பு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பாடப்புத்தகக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் (Co-curricular Activities) மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தேசிய மாணவர் படையணியின் (National Cadet Corps) ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் அப்படையணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களது முதலீட்டுத் திட்டங்களுக்கான நடைமுறைகளை இலகுபடுத்தும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Management Club Investment Forum உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில் அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி கையாள்வதற்காக, வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுவரும் ” One Stop Shop Investment

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர்

“கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்ற போது, கண்ணுக்குத் தெரிகின்ற பாத்தீனியத்தை ஏன் உரிய துறைசார்ந்தவர்களால் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாத்தீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது

பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது

மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணமானது சகல இன, மத மக்களின் பாரம்பரியங்களையும் சமமாக மதித்து, அவர்களது பண்டிகைகள் மற்றும் விழாக்களைச் சிறந்த முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது Read More »