ஆளுநர்

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கமைவாகத் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின் […]

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. Read More »

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர்

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண

எமது மாகாண இளைஞர் ஒருவர் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம்

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள்

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம் Read More »

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும்

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. Read More »

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது, நடப்பு ஆண்டில் பனங்கள் ஏற்றுமதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பனை அபிவிருத்திச்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »