கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார்.
கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அந்த அமைப்பின் கீழ் இயங்கி வரும் 5 வௌ;வேறு இல்லங்களுக்கும் நேரில் பயணம் செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களைச் சந்தித்து அவர்களின் நலன்களைக் கேட்டறிந்துகொண்டார். இதன்போது, குறித்த அமைப்பின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில் […]
