ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்
ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி அந்த வகையில் மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தப் பழைய மாணவர்களின் அளப்பரிய பங்களிப்பின் ஊடாகவே இக்கல்லூரி கல்வியிலும் பௌதீக வளத்திலும் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, கல்லூரி […]
