ஆளுநர்

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19.08.2026) புதன்கிழமை […]

வடக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம்; விரும்பத்தகாத சம்பவங்கள் மீண்டும் இடம்பெறக்கூடாது – ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம்

வீதிப் போக்குவரத்து விபத்துக்களைத் தடுப்பதற்கும், உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் குறைப்பதற்கும் வீதியைப் பயன்படுத்தும் அனைவரிடமும் பொறுப்புணர்வை உருவாக்கும் நோக்கில், போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த வீதிப் போக்குவரத்து விபத்து

வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயற்பாடுகள் ஆரம்பம் Read More »

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர்

வடக்கு மாகாண இளையோர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது எமக்குச் சாதகமான விடயமாகும். இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அதனை ஒருபோதும் சிதைக்காத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். ‘இளைஞர் நிலவரக் குறியீடு: இலங்கையில் உள்ளடக்கிய ஆட்சிக்கான இளைஞர்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளைப் பதிவுசெய்தல்’ என்ற

வடக்கு மாகாண இளையோரின் உள்ளூராட்சி சேவைகள் மீதான நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும் – ஆளுநர் Read More »

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர்

நல்லைக்குமரன் மலர் போன்ற வெளியீடுகள் வெறுமனே அச்சுப் பிரதிகளாக வெளியிடப்பட்டு நூல் அலுமாரிகளில் நிற்பதுடன் முடிவடையக்கூடாது. இன்றைய இளைய தலைமுறையின் வாசிப்பு பழக்கமும் தகவல் பெற்றுக்கொள்ளும் முறையும் மாறிவரும் நிலையில், இத்தகைய அறிவுச் செல்வங்கள் அச்சு வடிவத்துடன் டிஜிட்டல் வடிவங்களிலும் அவர்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் ஒரு வருடாந்த வெளியீடு தலைமுறைகளை இணைக்கும் தொடர்ச்சியான பண்பாட்டு இயக்கமாக மாறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நல்லைக்குமரன் மலர் – 34 வெளியீட்டு விழா

நூல்கள் அலுமாரியில் மட்டும் இருந்தால் அவை ஆவணங்கள்; இளைய தலைமுறையின் கைகளில் சென்றால் அவை இயக்கங்களாக மாறும் – ஆளுநர் Read More »

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம்

மேலும் இரு இடங்களில் மண் கழுவும் பணிக்கான கேள்விக் கோரலை விரைவுபடுத்தவும் ஆளுநர் பணிப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள மணலை அடுத்த வாரம் முதல் உரிய அனுமதிகளுடன் பொதுமக்களுக்குத் துரிதமாக விநியோகிப்பதற்கும், இரணைமடுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேலும் சில இடங்களில் மண்ணைக் கழுவி மணல் பெற்றுக்கொள்ளும் பணிகளுக்கான கேள்விக் கோரலை விரைவாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் மற்றும் கிரவல் அகழ்வு, விநியோகம் தொடர்பான

கிளிநொச்சியில் சேகரிக்கப்பட்ட மற்றும் கழுவி எடுக்கப்பட்ட மணலைத் துரிதமாக விநியோகிக்க தீர்மானம் Read More »

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர்

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொண்டு, அந்த மாற்றங்களுக்குள் எம்மைத் தக்க வைத்துக்கொள்வதற்கு தொடர்ச்சியான பயிற்சிகள் அவசியம். ஒரு மனிதனின் அறிவிலும் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கிய கருவியாகப் பயிற்சி அமைகின்றது. எனவே, நீங்கள் பெற்ற பயிற்சியின் உண்மையான பலன் உங்கள் பணியில் வெளிப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் – ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவின் கீழ் இயங்கும் முகாமைத்துவ

வேகமாக மாறிவரும் சூழலுக்கு ஏற்ப எம்மைத் தகவமைத்துக்கொள்ள பயிற்சிகள் அவசியம்; அதன் பலன் பணியில் வெளிப்பட வேண்டும் – ஆளுநர் Read More »

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில்

மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாகாண நிர்வாகத்தின் அனைத்து அங்கங்களும் ஒரே திசையில் பயணிக்க வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான முன்னேற்றக் கலந்துரையாடல் இன்று (17.08.2026) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, முன்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. மேலும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மீளாய்வு வரைவு தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. கூட்டுறவு பணியாளர்களின் தகைமைகள்

கூட்டுறவு பணியாளர்களின் தகைமை மற்றும் சம்பள மீளாய்வு தொடர்பில் விரிவான கலந்துரையாடல் Read More »

ஆளுநர் தலைமையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன்

ஆளுநர் தலைமையில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுக்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் Read More »

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர். இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். Read More »