வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆளுநர் செயலகத்தில் இன்று (28.03.2026) சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து 8.45 மணி வரையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் […]
