ஆளுநர்

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்திக்கு அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (11.03.2026) காலை நடைபெற்றது. தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர […]

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நோக்கிய அபிவிருத்தியைத் துரிதப்படுத்துதல் தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகின்றது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் – 2025’ வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன்

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு எதிர்கால வடக்கு மாகாண பங்களிப்பானது 10% ஆக உயர்த்தப்படல் வேண்டும் – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

எமது பாரம்பரிய பயிர்ச்செய்கை முறைமைக்குப் பெரும் சவாலாக மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையில், ‘காலநிலைக்குச் சீரமைவான விவசாய முறைமை’ எமது மாகாணத்துக்குத் தற்போதைய காலத்தின் கட்டாயத் தேவையாகும் எனவும், இப்புதிய பயிர்ச்செய்கை முறைமையினூடாக எமது விவசாயிகள் தமது வருமானத்தைப் பெருமளவு உயர்த்திக் கொள்ள முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நவீன விவசாயமே காலத்தின் கட்டாயம்; விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டம்!” – கிளிநொச்சியில் ‘காலநிலை சீர்மிகு விவசாய சமூகப் பண்ணை’யைத் திறந்து வைத்து ஆளுநர் நா.வேதநாயகன் உரை. Read More »

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள்.

வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விலைகளைக் கட்டுப்படுத்தி ஒரே சீராகப் பேணுவதற்கும், மக்களின் தேவைக்கேற்ற விநியோகத்தை தடையின்றி வழங்குவதற்குமான புதிய பொறிமுறையொன்றை உருவாக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (10.03.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மணல் மற்றும் கிரவல் விநியோகத்தில் வடக்கு மாகாணத்தில் தற்போது எழுந்துள்ள சவால்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வுகாண்பதற்காக, ஆளுநரால் விடுக்கப்பட்ட விசேட அழைப்பை ஏற்று, புவிச்சரிதவியல்

“மணல் மாபியாக்களுக்கு முற்றுப்புள்ளி; சீரான விலையில் தடையற்ற விநியோகம்!” – ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் அதிரடித் தீர்மானங்கள். Read More »

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பும் விசேட செயற்றிட்டமான ‘லன்ரேன்’ (LANTERN – Land and Trust-building Engagement in the Regions of the North & East) திட்டத்தை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகப் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்ஸோ, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின்

புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது

மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று

உள்ளூராட்சி அமைச்சின் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது Read More »

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (09.03.2026) மாலை நடைபெற்றது. கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆளுநருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்ட விடயங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் போக்குவரத்துப் படிகள், இடமாற்றங்கள், மற்றும் மாகாணத்தில் எந்திரவியல் பொருட்கள் ஆய்வுகூடங்களை அதிகரித்தல், ‘தொழில்நுட்பக் கணக்காய்வு’ முறைமையொன்றை

இலங்கை தொழில்நுட்பவியல் சேவையாளர் சங்கத்தின் வட மாகாணப் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சர்வதேச மகளிர் தின (08.03.2026) வாழ்த்துச் செய்தி

சர்வதேச மகளிர் தினத்தில் எமது வடக்கு மாகாணப் பெண்களுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் அதியுயர் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றேன். போர் தின்று தீர்த்த எமது வடக்கு மண்ணில், பெண்களின் வகிபாகம் என்பது வெறுமனே குடும்ப நிர்வாகம் என்பதையும் தாண்டி, ஓர் ஒப்பற்ற தியாக வரலாறாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, எமது மாகாணமானது பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகளவில் கொண்டதொரு நிலப்பரப்பாகும். குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர்களை இழந்த நிலையிலும், பெருந்துயரங்களுக்கு மத்தியிலும், அந்தக்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சர்வதேச மகளிர் தின (08.03.2026) வாழ்த்துச் செய்தி Read More »

மகளிர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடந்த 2025ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் அடைவுகள் மற்றும் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், நடப்பு

மகளிர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மாகாண சபையின் நிதியுடனும் விவசாயிகளின் நேரடிப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட நவீன விவசாய முறைத் திட்டங்கள் பெருமளவு வெற்றியைத் தந்துள்ளமையால், அத்திட்டங்களைத் தொடர்ந்தும் விரிவாக முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) காலை நடைபெற்றது.

விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »