ஆளுநர்

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி*

வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள் […]

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி* Read More »

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறான கூட்டு முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு Read More »

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அப்பகுதி மக்களின் அடிப்படை உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோர் உறுதியளித்தனர். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையானது, கல்லாறு

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி Read More »

நிதிப் பயன்பாட்டில் 98% இலக்கை எட்டி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்!” – 2026 ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்ப நிகழ்வில் பெருமிதம்

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம்

நிதிப் பயன்பாட்டில் 98% இலக்கை எட்டி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்!” – 2026 ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்ப நிகழ்வில் பெருமிதம் Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர்

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலர்கின்ற 2026 ஆம் ஆண்டானது, வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் இருள் நீங்கி, ஒளி பிறக்கும் ஒரு நம்பிக்கை ஆண்டாக அமைய எனது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலங்களில் இயற்கைப் பேரிடரால் நாம் இழந்தவை ஏராளம். ஆனால், ‘பாதிக்கப்பட்ட வாழ்க்கையைத் பழைய நிலைக்குத் திருப்புவது மட்டும் எமது இலக்கல்ல் அது முன்னரை விடப் பல மடங்கு சிறந்ததாக, வளமானதாக மாற வேண்டும்’ என்பதே எமது புத்தாண்டின் தாரக மந்திரமாகும். இடிந்து போன சுவர்களை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

“வாழ்வாதார உதவி வழங்குவதுடன் நின்றுவிடாது, உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் வழியமைப்போம்!” – புதிய அமைச்சுக் கட்டடத் திறப்பு விழாவில் ஆளுநர் உறுதி

வடக்கு மாகாண சபை ஊடாகச் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு, அவர்களது தொழில் மேம்பாட்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாது, அவர்களது உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றோம். அத்துடன், அவர்களது உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கதவுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக

“வாழ்வாதார உதவி வழங்குவதுடன் நின்றுவிடாது, உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும் வழியமைப்போம்!” – புதிய அமைச்சுக் கட்டடத் திறப்பு விழாவில் ஆளுநர் உறுதி Read More »

“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறைப் படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும், அத்துறையில் போதியளவான பயிற்றப்பட்ட ஆளணிகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. எனினும், தற்போதைய இளைய சமூகம் சுற்றுலாத்துறை சார் தொழில் வாய்ப்புகள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் உள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனவே, எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை மேலும் விரிவடையும்போது, அதற்கான ஆளணிகளை இங்கிருந்தே வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நம்பிக்கை வெளியிட்டார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண சுற்றுலா விருதுகள் –

“சுற்றுலாத்துறை வளர்ச்சியின் ஊடாக வடக்கின் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் பரந்தளவிலான தொழில் வாய்ப்புகள் கிட்டும்!” – ஆளுநர் நம்பிக்கை Read More »

சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இணையவழி கற்றல் செயற்பாடுகள் தொடர்பான விசேட மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (30.12.2025) மாலை, ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி மேற்பார்வையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொழில்நுட்ப மற்றும் வள ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், யாழ்ப்பாணம்

சவால்களைக் கடந்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவோம்” – இணையவழி கற்றல் மீளாய்வுக் கூட்டத்தில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் தலைவராக, சுற்றுலா அபிவிருத்தி ஆலோசகராகப் பணியாற்றும் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று திங்கட் கிழமை காலை (29.12.2025) ஆளுநர் கையளித்தார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்திற்கு புதிய தலைவர் நியமனம் Read More »