“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி*
வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள் […]
