Uncategorized

42 transport sin

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார […]

42 transport sin Read More »

41 mullai land sin

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

41 mullai land sin Read More »

15 europe sin

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய

15 europe sin Read More »

සමාජ මාධ්‍ය හරහා ප්‍රචාරය වන කරුණු පිළිබඳව තරුණ පරපුර පමණක් නොව, සැවොම දැඩි අවධානයකින් යුතුව කටයුතු කළ යුතුය. – ගරු ආණ්ඩුකාරතුමා

සමාජ මාධ්‍ය ජාලාවල පළවන තොරතුරුවල සත්‍ය අසත්‍යතාව සහ ඒවායේ පසුබිම පිළිබඳව දැඩි ලෙස සොයා බැලීමෙන් පසුව පමණක් ඒවාට කැමැත්ත ප්‍රකාශ කිරීම (Like) හෝ හුවමාරු කර ගැනීම (Share) කළ යුතුය. සමාජ මාධ්‍යවල පළවන සෑම දෙයක්ම අන්ධ ලෙස විශ්වාස කිරීම හේතුවෙන් සමාජය තුළ බොහෝ අහිතකර ප්‍රතිඵල ඇති වන බව උතුරු පළාත් ගරු ආණ්ඩුකාර නා. වේදනායගම් මහතා පැවසීය.

සමාජ මාධ්‍ය හරහා ප්‍රචාරය වන කරුණු පිළිබඳව තරුණ පරපුර පමණක් නොව, සැවොම දැඩි අවධානයකින් යුතුව කටයුතු කළ යුතුය. – ගරු ආණ්ඩුකාරතුමා Read More »

25 sin agri sec report

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது

25 sin agri sec report Read More »

24 sin UNDP

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண

24 sin UNDP Read More »

22 sin mc commissioner

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

22 sin mc commissioner Read More »

21 sin ariyaathai

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

21 sin ariyaathai Read More »

20 sin liquid fertilizer

எல்லா வகையான விவசாய உற்பத்திப் பொருட்களிலும் இரசாயனங்கள் மற்றும் அசேதனப் பதார்த்தங்கள் கலந்து உலகளாவிய ரீதியில் அதன் விளைவான பாதிப்புக்கள் அதிகரித்துச் செல்லும் தற்போதைய சூழலில், எமது மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விவசாயத் திணைக்களத்தின் பங்களிப்புடன் இயற்கை திரவப்பசளைகள், தாவர பீடைநாசினிகள் மற்றும் பூச்சி விரட்டிகள் அறிமுகப்படுத்தியுள்ளமை மிகப்பெரிய சாதனையாகும். வடக்கு மாகாண மக்கள் சார்பில் அவரைப் பாராட்டுவதுடன், அவரின் தொடர் முயற்சிகளுக்கு எமது மாகாண நிர்வாகம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கும் என வடக்கு மாகாண

20 sin liquid fertilizer Read More »

19 agri sin

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள்

19 agri sin Read More »