நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற வீட்டுத்திட்டக் கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) கையளிக்கப்பட்டது. கல்லுண்டாயில் சுமார் 103 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். தாழ்நிலப் பகுதியான இங்கு மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நீர் தேங்கி நிற்கும் அவலமும் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும் […]
