கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்
“எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் புதிய பற்சிகிச்சைப் […]
