Balasingam Kajenderan

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பிரதான கொள்கைகளில் ஒன்றான அரச சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கை முன்னிறுத்தி, உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகச் செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை (LGPMS – Local Government Payment Management System) எனும் மென்பொருள் அமைப்பு தொடர்பான செயல்முறைப் பயிற்சி வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி […]

பொதுமக்களுக்கு விரைவான, வெளிப்படையான, திறன்மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான மின்னணுப் பணப் பரிவர்த்தனை மற்றும் சேவை முகாமைத்துவ முறைமை எனும் மென்பொருள் அறிமுகம் Read More »

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் நேற்று (07.08.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார். வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி கு. காஞ்சனா அவர்கள் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு திருமதி நி. தவலோஜினி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  

வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம் Read More »

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதுடன், கூட்டுறவுச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சாதகமான சூழலை வடக்கு மாகாணம் முழுமையாகப் பயன்படுத்தி, கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு மாநாடு இன்று

கடந்த காலப் பெருமையை மீட்டெடுக்கும் வகையில் கூட்டுறவுத்துறையை மீளெழுச்சியடையச் செய்ய வேண்டும் – கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர்

கல்விக்காக வழங்கப்படும் உதவியே மனிதனின் வாழ்க்கையை மாற்றக்கூடிய மிகப் பெரிய உதவியாகும் என்றும், ‘எங்களால் எதுவும் முடியாது என்றில்லை, முயன்றால் எதுவும் முடியும்’ என்ற மனப்பாங்குடன் மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவசக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய

வடக்கு மாகாணத்தை முன்னணிக்குக் கொண்டு வருவோம்’ என்ற உறுதியுடன் ஒவ்வொரு மாணவரும் பரீட்சை மண்டபத்துக்குள் செல்ல வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி

இன்று நாம் நடும் ஒவ்வொரு தென்னம்பிள்ளையும் ஒரு மரக்கன்றாக மட்டுமல்ல, வடக்கு மாகாணத்தின் எதிர்கால பொருளாதாரத்துக்கான முதலீடாகும். அவற்றைப் பாதுகாத்து, வளர்த்து, பயனடையச் செய்வது அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஏற்பாட்டில்,

வடக்கு மாகாணத்தை நாட்டின் முன்னணி தென்னை உற்பத்தி வலயமாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் – கௌரவ ஆளுநர் உறுதி Read More »

காலநிலை மாற்றங்களால் வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த நடைமுறை அடிப்படையில் செயல்பட வேண்டும்’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல்.

காலநிலை மாற்றம், உற்பத்திச் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் சந்தைச் சவால்கள் போன்ற காரணிகளால் வடக்கு மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படாத வகையில், கூட்டுறவு இயக்கத்தை மையப்படுத்திய புதிய செயற்பாட்டு வேலைத்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் விரிவான உயர்மட்ட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் உணவுப் பாதுகாப்பை நிலையான முறையில் வலுப்படுத்துதல், விவசாய உற்பத்தியை அதிகரித்தல், விவசாயிகளின் வருமானத்தை

காலநிலை மாற்றங்களால் வடக்கு மாகாணத்தின் உணவு உற்பத்தி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, கூட்டுறவு அமைப்புகளைப் பயன்படுத்தி உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த நடைமுறை அடிப்படையில் செயல்பட வேண்டும்’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். Read More »

“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு யாழ். கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில் “PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு இன்று (07.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், தனது உத்தியோகபூர்வ டிஜிட்டல் பணப்பரிமாற்றத் தொடுகை பரிவர்த்தனையையும் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் குறிப்பிடுகையில், ‘இன்றைய உலகம் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், டிஜிட்டல் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பாக டிஜிட்டல்

“PayDigital Jaffna” விழிப்புணர்வு மற்றும் அறிமுக நிகழ்வு யாழ். கார்கில்ஸ் சதுக்க வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. Read More »

யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக அமைந்துள்ள மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் முன்னர் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு மாகாண சுதேச வைத்தியத்துறை

யாழ். போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய கட்டுமான நடவடிக்கைகளுக்காக, மருத்துவமனையின் சில பிரிவுகளை மாகாண சபைக்குச் சொந்தமான கட்டடத்துக்குத் தற்காலிகமாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில்முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (06.08.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழிற்துறை திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களங்கள் மற்றும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள்

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

நீதி அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைச்சாலைகளின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை மாலை இடம்பெற்றது. கலந்துரையாடல் தொடர்பில் அமைச்சர் இ.சந்திரசேகர்

யாழ்ப்பாணம், வவுனியா சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட அவசரக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. Read More »