Balasingam Kajenderan

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

“எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் புதிய பற்சிகிச்சைப் […]

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லாத வகையில், அவர்களது சொந்தக் கிராமங்கள் மேம்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கு மாகாணத்தில் விரைவில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களிலிருந்து கல்வி நடவடிக்கைக்காகச் செல்லும் மாணவர்களுக்கு இதன் நேரடி நன்மை கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘சிசு செரிய’ சேவையானது கல்வி அமைச்சு, பொலிஸ் திணைக்களம், இலங்கை

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் நோக்கில், ‘சிசு செரிய’ பேருந்துச் சேவை வடக்கில் முழுமையாக விரிவுபடுத்தப்படவுள்ளது Read More »

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயத்துறையைத் தேசிய மட்டத்துக்கு இணையாகக் கட்டியெழுப்புவதுடன், மாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான அதிமுக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை காலை (25.03.2026) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் தேசிய பணிப்பாளர் நாயகம் கலாநிதி விக்கிரமாராச்சி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் மற்றும் வடக்கு மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் மிக

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலான உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (24.03.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு

வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள்,நேர்மையுடனும் கண்ணியத்துடனும் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் – ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். Read More »

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையே விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத்

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை

எந்தவொரு உற்பத்தியாளரினதும் உற்பத்திப் பொருட்களுக்குரிய நியாயமான விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் எனவும், இடைத்தரகர்கள் உழைத்துச் செல்வதற்கு இடமளிக்காமல் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்கும்போதே எமது மாகாணம் முழுமையாகத் தன்னிறைவடைய முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘வடக்கிற்கான தொழில்துறைகள் மன்றத்தின்’ வருடாந்தப் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணம் நோர்த் கேட் ஹோட்டலில் இன்று சனிக்கிழமை (21.03.2026) மாலை, மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும்போதே

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வளர்ச்சி ஏற்றுமதியை நோக்கியதாக அமைய வேண்டும். அதற்கான உந்துதலை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் – கௌரவ ஆளுநர் உரை Read More »

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள குறித்த வலையமைப்பின் தலைமை அலுவலகத்துக்குச் சென்ற ஆளுநர், அந்த அமைப்பின் கீழ் இயங்கி வரும் 5 வௌ;வேறு இல்லங்களுக்கும் நேரில் பயணம் செய்தார். அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள விசேட தேவையுடையவர்களைச் சந்தித்து அவர்களின் நலன்களைக் கேட்டறிந்துகொண்டார். இதன்போது, குறித்த அமைப்பின் அடிப்படைத் தேவைகள் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில்

கிளிநொச்சி விசேட தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்பின் செயற்பாடுகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

ஒரு மாத காலமாகப் புனித நோன்பு நோற்று, இறை பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கத்துடன் அதனை நிறைவு செய்து, ஈதுல் பித்ர் எனும் ரமழான் பெருநாளைக் கொண்டாடும் வடக்கு மாகாணம் உள்ளிட்ட இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். ரமழான் பண்டிகையானது வெறுமனே உணவையும் தாகத்தையும் தவிர்ப்பது மட்டுமல்லாமல், பொறுமை, தியாகம், சகோதரத்துவம் மற்றும் சக மனிதர்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவும் உன்னத மனிதாபிமானப் பண்புகளை வலியுறுத்துகின்றது.

ரமழான் பெருநாளை முன்னிட்டு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி Read More »

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத்

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். Read More »