வடக்கு மாகாண கல்வி அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கை மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவிடமிருந்து கிடைக்கப்பெற்று அனுமதிக்கப்பட்டவுடன், அடுத்த ஆண்டுக்கான இடமாற்ற நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (05.08.2026) புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாகாணத்தில் 3,304 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1,411 […]
