Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்தில் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு […]

வடக்கு மாகாணத்தில் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read More »

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஒரு நகரமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கோடு, ‘இம்பக்ட்’ அணியினரால் ‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மாதிரிச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, இச்செயற்றிட்டம் தொடர்பில் இம்பக்ட் அணியினரால் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு மரநடுகைத் திட்டமாக

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும் எனவும், இக்கருத்தரங்கின் ஊடாக முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு – 2026 இன்று

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். Read More »

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையோடு இணைந்து நடாத்திய வடக்கு மாகாண சிவராத்திரி தினமானது 2026.02.15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30மணிக்கு முதலாம் சாமப் பூஜைக்குரிய அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 7.00 மணிவரை நடைபெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் மேடைநிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு

வடக்கு மாகாண சிவராத்திரி தினம் – 2026 Read More »

கிளிநொச்சியில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, கௌரவ ஆளுநர் விஜயம்

கிளிநொச்சி அறிவியல் நகரத்தில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று புதன்கிழமை (25.02.2026) களப் பயணமொன்றை மேற்கொண்டார். தொழிற்சாலைக்குச் சென்ற ஆளுநரை, கார்கில்ஸ் நிறுவனத்தின் வட பிராந்திய வியாபார அபிவிருத்தி முகாமையாளர் ஆர்.பாலகுமார் வரவேற்றார். இந்தக் களப் பயணத்தின்போது, வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து மரக்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாகக் கொள்வனவு செய்யும் செயன்முறை, மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து பாலைக் கொள்வனவு செய்யும் செயன்முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்

கிளிநொச்சியில் அமைந்துள்ள கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘கிஸ்ட்’ (KIST) தொழிற்சாலைக்கு, கௌரவ ஆளுநர் விஜயம் Read More »

தொழில்நுட்ப பீடம், பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் , இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் இணைந்துக்கொள்ள முடியும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்குப் பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்குத் தோள்கொடுத்து உதவ வேண்டும் எனவும், இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே எதிர்காலத்தில் எமது மாகாணம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள தொழில்நுட்ப பீடத்தில் இன்று புதன்கிழமை (25.02.2026) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘நடப்பு ஆண்டில்

தொழில்நுட்ப பீடம், பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் , இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் பயிற்சி அடிப்படையில் அபிவிருத்தி செயற்றிட்டங்களில் இணைந்துக்கொள்ள முடியும். – கௌரவ ஆளுநர் Read More »

“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (25.02.2026) மாலை கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்புதிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், இது வெறுமனே ஒரு இணையத்தளத்தையோ அல்லது மென்பொருளையோ

“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை. Read More »

மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லையென்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இ.சந்திரசேகர் மற்றும்

மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். Read More »

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார்.

இலங்கையிலேயே முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்’ மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியன விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மாலை இரு கட்டங்களாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூலகாரணமாகத்

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார். Read More »