Balasingam Kajenderan

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், வேலனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அடிக்கல் நடும் விழா இன்று (02.08.2026) ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளிவாசல் வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முனவ்பர் அவர்களின் பிரதம பங்குபற்றலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பிரதிநிதியாக ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். வெள்ளக்கடற்கரை […]

வேலனை பிரதேச செயலகப் பிரிவில் மண்கும்பான் வெள்ளக்கடற்கரை ஜும்ஆ பள்ளிவாசலின் மீள் கட்டுமானப் பணிக்கு, அடிக்கல் நடும் விழா இடம்பெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடமாடும் சேவை இன்று சனிக்கிழமை (01.08.2026) நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தினூடாக 406 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள் உரிய காலப்பகுதிக்குள் தமக்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமையால் பல்வேறு சிரமங்களை

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துக் கல்வி வலயங்களிலும் 54 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் சுயவிவரக் கோவைகளை இற்றைப்படுத்தும் நடவடிக்கை நிறைவு Read More »

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக, மாகாணம் தழுவிய ரீதியில் மூன்று ஆண்டுகளுக்கான நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தின் இந்த ஆண்டுக்குரிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 7,606 நாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களமும், உள்ளூராட்சி

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள், சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநரின் நேரடி ஆலோசனை, வழிகாட்டலுக்கு அமைய, மாகாணம் தழுவிய ரீதியில் நாய்களுக்கான விசேட கருத்தடைச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read More »

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) திடீர் கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது அதிகார சபைக்குச் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியதோடு, அவர்கள் தமது கடமையின்போது எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார

வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு, கௌரவ ஆளுநர் களவிஜயமொன்றை மேற்கொண்டார். Read More »

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31.07.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் வரவேற்புரையாற்றிய முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன், ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள், மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

‘எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள் மிகவும் அவசியமானவையாகும். முதலீட்டாளர்கள் உரிய காலப்பகுதிக்குள் திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஒரு திணைக்களம் அனுமதி வழங்கினாலும், மற்றுமொரு திணைக்களத்தின் அனுமதி கிடைக்கப்பெற தாமதமாவதால் முதலீட்டாளர்கள் விரக்தியடைகின்றனர். இது தொடர்பில் அனைத்துத் திணைக்களங்களும் விசேட கவனம் செலுத்துவதோடு, தேவைப்படின் நிபந்தனைகளுடனாவது அனுமதிகளை வழங்க முன்வர வேண்டும். அதேவேளை, முதலீட்டாளர்களும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், என கடற்றொழில், நீரியல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல்

வடக்கு மாகாண சுகாதாரத் துறையின் எதிர்கால சேவைத் தரத்தை நிர்ணயிக்கும் சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுக்கும் இடமளிக்காமல் அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமாகும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார உதவியாளர் நியமனத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது குழு உறுப்பினர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்போதே

சுகாதார உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கையானது, எவ்வித அழுத்தங்களுமின்றி அதியுயர் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வுடன் நிறைவேற்றப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தல் Read More »

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி ஊழலற்ற நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் ‘நேர்மை நடைபவனி’ நிகழ்வானது இன்று (28.07.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய முன்னெடுக்கப்படும் ‘நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில், நேர்மை வாரத்தின் (2026 ஜூலை 27 முதல் 31 வரை) இரண்டாம் நாள் நிகழ்வுகள் ‘நேர்மைமிக்க

வடக்கு மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்ற ‘நேர்மை நடைபவனி’ அணியை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். Read More »

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு, ‘கூட்டு முகாமைத்துவக் குழு’ கூட்டத்தில் இன்று (27.07.2026) திங்கட்கிழமை எட்டப்பட்டுள்ளது. இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற 7ஆவது கூட்டு முகாமைத்துவக் கூட்டத்தில் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலரும் பல்வேறு இடங்களிலிருந்தவாறு கலந்துகொண்டனர். கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. Read More »

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். இந்தப் பாராட்டைப் பார்த்து, இங்குள்ள ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்று, தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைக் கைப்பற்றிய யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் செல்வன்

தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனை நாம் இங்கு பாராட்டுகின்றோம். ஏனைய மாணவர்களும் தாங்களும் அவ்வாறு முதலிடத்துக்கு வர வேண்டும் என்ற ஓர்மத்துடன் கற்க வேண்டும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »