Balasingam Kajenderan

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

கல்வி அறிவை மட்டும் வழங்குவதால் ஒரு மனிதன் முழுமையடைவதில்லை, நல்ல குணம், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிறருக்காகப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டு […]

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் Read More »

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டார். இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம் Read More »

கூட்டுறவுத்துறையை மீள வலுப்படுத்த அதிகாரிகளிடம் மனமாற்றம் அவசியம் – ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறையை மீண்டும் வலுவான பொருளாதார சக்தியாகக் கட்டியெழுப்புவதற்கு, கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் புதிய சிந்தனையும் மனமாற்றமும் ஏற்பட வேண்டும். அலுவலக மட்டத்திலிருந்து செயற்படுவதைக் கடந்து, களத்துக்குச் சென்று சங்கங்களின் உண்மையான தேவைகளை அறிந்து, அவற்றை உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நவீன முகாமைத்துவத்துடன் இணைத்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (11.09.2026)

கூட்டுறவுத்துறையை மீள வலுப்படுத்த அதிகாரிகளிடம் மனமாற்றம் அவசியம் – ஆளுநர் Read More »

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் எதிர்வரும் புதன்கிழமை (16.09.2026) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்துக்கான முன்னேற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும்

ஜனாதிபதி மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பயணம் – முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுடன் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் தற்போது போதிய இடவசதியின்றி இயங்கி வரும் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவின் தேவையை நிவர்த்தி செய்வதுடன், எதிர்கால மருத்துவத் தேவைகளையும் கருத்திற்கொண்டு பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆராயப்பட்டது. கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (10.09.2026) வியாழக்கிழமை

கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் இயன்முறை மருத்துவச் சிகிச்சைப் பிரிவுடன் பல்வேறு மருத்துவ வசதிகளை உள்ளடக்கிய புதிய கட்டடம் – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு – அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வீதி உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவு செய்து, ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகவும் தரமாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு தடையாக உள்ள தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிதி மூலங்களின் கீழ் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப மற்றும் நடைமுறைச்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தொழில்நுட்ப ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு – அமைச்சர் மற்றும் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல் Read More »

கள் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை அகற்றி வெளிப்படையான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்கத் தீர்மானம்

கள் ஏற்றுமதியில் தற்போது நிலவும் இடையூறுகளை அகற்றி, எதிர்காலத்தில் வெளிப்படையானதும் நிரந்தரமானதுமான பொறிமுறையொன்றை உருவாக்குவதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (10.09.2026) வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. குறிப்பாக, காரைநகர் பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின்

கள் ஏற்றுமதியில் உள்ள இடையூறுகளை அகற்றி வெளிப்படையான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்கத் தீர்மானம் Read More »

அறநெறிக் கல்வியை வலுப்படுத்த சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான நடவடிக்கைகள் அவசியம் – ஆளுநர்

இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான அறநெறிக் கல்வியை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதனை கல்வி அமைப்புடன் பொருத்தமாக இணைத்து பரந்தளவில் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக திருக்கூட்டம் – 2026’ நிகழ்வு இன்று (09.09.2026) புதன்கிழமை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலை மண்டபத்தில் சிறப்பாக

அறநெறிக் கல்வியை வலுப்படுத்த சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான நடவடிக்கைகள் அவசியம் – ஆளுநர் Read More »

இசையையும் ஆன்மிக உணர்வையும் ஒன்றிணைத்த “தெய்வீக சுகானுபவம் – 12” நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

இசையின் ஊடாக மனதுக்கு அமைதியையும் ஆன்மிக உணர்வையும் வழங்கும் ‘தெய்வீக சுகானுபவம் – 12’ நிகழ்வு சிறப்பாக நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்துடன் இணைந்து வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தெய்வீக சுகானுபவம் – 12’ இசை நிகழ்வு, நேற்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை இரவு கந்தர்மடம்

இசையையும் ஆன்மிக உணர்வையும் ஒன்றிணைத்த “தெய்வீக சுகானுபவம் – 12” நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு Read More »

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தணிக்க வாய்க்கால் புனரமைப்பு மற்றும் குளத் தூர்வாரும் பணிகள் உடனடியாக முன்னெடுப்பு

சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தும் வகையில், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமும் வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபையும் இணைந்து வாய்க்கால் புனரமைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதியில் நீரைத் தேக்கி வைக்கும் திறனை மேம்படுத்துவதற்காக பொருத்தமான குளங்களையும் உடனடியாகத் தூர்வாருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதுமலைப் பகுதியில் நிலவும் வெள்ளப்பெருக்கு மற்றும் வாய்க்கால்களில் காணப்படும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில்

சுதுமலைப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தணிக்க வாய்க்கால் புனரமைப்பு மற்றும் குளத் தூர்வாரும் பணிகள் உடனடியாக முன்னெடுப்பு Read More »