Balasingam Kajenderan

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பாராட்டுவதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவிப்பு.

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நிலைமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகள் பாராட்டப்படுவதாகவும் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளத்திற்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு.பாரிஸ் ஹடாட்ஜேர்வோஸ் Faris Hadad Zervos தெரிவித்துள்ளார்.  வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸை இன்று (2023.09.21) வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி …

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து பாராட்டுவதாக உலக வங்கியின் பணிப்பாளர் தெரிவிப்பு. Read More »

தெய்வீக சுகானுபவம் – 09

பயிற்சிப்பட்டறை தெய்வீக சுகானுபவம் 9 இனை முன்னிட்டு இசைக்கச்சேரி நிகழ்விற்காக இந்;தியாவிலிருந்து வருகை தந்த புல்லாங்குழல் விற்பன்னர் திரு.ஜே.ஏ.ஜெயந்த் மற்றும் வயலின் விற்பன்னர் பி.அனந்தகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வடமாகாண இசைக்கலைஞர்களுக்காக பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்து நிகழ்த்தியிருந்தனர். பயிற்சிப்பட்டறை நிகழ்வானது 09.09.2023 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இசை ஆசிரியர்கள், கலைமன்றங்களைச்சேர்ந்த …

தெய்வீக சுகானுபவம் – 09 Read More »

வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

வடக்கு மாகாண அமைச்சுக்களின் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 06.09.223 ஆம் திகதி புதன்கிழமை யாழ் மருதானார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் அத்துடன் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களும் கலந்து சிறப்பித்தார். பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அணியினை எதிர்த்து வடக்கு மாகாண உள்ளுராட்சி அணி மோதியது. இதில் வடமாகாணக் கல்வி அமைச்சு அணி …

வடக்கு மாகாண அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி Read More »

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் கீழ் அமைக்கப்பட்ட உள்ளக பூப்பந்தாட்டத் திடல் திறப்பு விழா கடந்த 27.08.2023 ஆம் திகதி வியாழக்கிழமை வடமாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் தலைமையில் காலை 9.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும் கௌரவ விருந்தினராக கல்வி அமைச்சின் …

யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி உள்ளகப் பூப்பந்தாட்டத்திடல் திறப்பு விழா Read More »

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு

வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வணிக பீடத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் தலைமைத்துவ டிப்ளோமா கற்களை (Diploma in Youth Leadership Program) நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்றையதினம் (08.09.2023) வவுனியாப் பல்களைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் குறித்த டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 307 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வவுனியாப் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் திரு.வை.நந்தகோபன் மற்றும் UNDP …

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்பு Read More »

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலய சிறப்பு திருப்பலி பூசையில் ஆளுநர் கலந்து கொண்டார்

யாழ்ப்பாணம் அடைக்கல மாதா தேவாலயத்தில் நடைபெற்ற அடைக்கல மாதாவின் பிறந்த நாள் விழாவினை கொண்டாடுவதற்கான நவதின வழிபாடுகளின் ஒன்பதாவது நாளான இன்று நடைபெற்ற சிறப்பு திருப்பலி பூசையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ்.கரவெட்டி கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் 06.09.2023 (புதன்கிழமை) ஆரம்பமானது. இந்த கட்டுமானத்திற்காக 35 மில்லியன் ரூபா தொகை செலவிடப்படவுள்ளது. கரவெட்டி பிரதேசத்தில் கோவிற்சந்தை  கிராம மக்கள் தற்காலிக கட்டிடத்தில் இதுவரையில் தமது வியாபார நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர். இந்த தற்காலிக கட்டடங்களில் போதிய வசதிகள் இல்லாததால், அப்பகுதியில் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும், நுகர்வோரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் புதிய வணிக இடம் அமைப்பது …

வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், மக்களின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புகளை ஒழுங்கமைக்க ஐக்கிய நாடுகள் சபை பூரண ஆதரவை வழங்கும் எனவும் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் அவர்களை 05.06.2023 மாலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்தின் சமூக, பொருளாதார மற்றும் நல்வாழ்வு தொடர்பில் திருப்திகரமான போக்கு காணப்படுவதாகவும், …

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார். Read More »

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது

வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் 06.09.2023 அன்று காலை ஆரம்பமானது. வடமாகாணத்தில் உள்ள 651 பாடசாலைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கோட்டமட்ட மற்றும் வலயமட்ட வெற்றிகளின் பின்னர் மாகாண விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 13 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 5000 விளையாட்டு வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. …

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா பெருமையுடன் ஆரம்பமாகின்றது Read More »

“இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP) ஏற்பாட்டில் நடைபெற்ற “இலங்கையில் பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது” குறித்த கொள்கை அறிக்கை அமைப்பு குழுவில் வடமாகாண ஆளுநர் கெளரவ திருமதி பி.எஸ்.எம் சார்லஸ் பங்குபற்றியிருந்தார்.