Balasingam Kajenderan

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது, நடப்பு ஆண்டில் பனங்கள் ஏற்றுமதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பனை அபிவிருத்திச்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர்

சமூகமட்ட அமைப்புகள் மூத்தோரின் முதிர்ந்த அறிவுரைகளுடன் இளையோர்களால் வழிநடத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகள் மறைந்து அறநெறி தழைத்தோங்கும். இத்தகைய தன்னியக்கக் கண்காணிப்புப் பொறிமுறை எமது மாகாணத்தின் பல கிராமங்களில் நலிவடைந்து வருவது கவலையளிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 106ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சங்கத்தின் தலைவர் கி.கிருஸ்ணதாசன் தலைமையில் நேற்று (09.05.2026) சனிக்கிழமை மாலை

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர் Read More »

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூராட்சி மட்டத்தில் காலநிலை ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உணர்வுள்ள உள்ளூர் ஆட்சி முன்னோடித் திட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று (09.05.2026) சனிக்கிழமை ஆரம்பமானது. ஜனநாயக மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IDAG),

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இயந்திரமயமான வாழ்வில் சிக்கி ஓடிக்கொண்டு மன அழுத்தங்களையும் மனச்சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் இவ்வாறான இசை நாடக கூத்துக்கள் மிகப் பெரிய வலிநீக்கியாக – புத்துணர்வு ஊட்டுவதாக இருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது Read More »

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள்,

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். Read More »

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள்

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை Read More »

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் ‘Study In’ நிறுவனத்தின் புதிய கிளை இன்று (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது: ‘எமது மாகாண மக்களைப் பொறுத்தவரையில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாகும். கல்வியில் எப்போதும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

எமது நிர்வாகக் கட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர்

எமது வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில்

எமது நிர்வாகக் கட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

‘வர்ண இரவு’ விருது வழங்கலில் குழு விளையாட்டுக்களுக்காக வழங்கப்படும் பரிசுதொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

தேசிய மட்டத்தில் சாதிக்கும் வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ விருது வழங்கலின் போது வழங்கப்படும் பரிசுத் தொகையில், குழு விளையாட்டுக்களுக்கான தொகையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், பரிசுத் தொகை மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

‘வர்ண இரவு’ விருது வழங்கலில் குழு விளையாட்டுக்களுக்காக வழங்கப்படும் பரிசுதொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் Read More »