Balasingam Kajenderan

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை (27.07.2026) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் […]

‘நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை’ தேசிய செயற்பாட்டின் கீழ், ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது. Read More »

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை

அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை’ எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை 2026 தொடக்கம் 31 ஜூலை 2026 வரை) அறிமுக நிகழ்வு, இன்று திங்கட்கிழமை (27.07.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர்

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறினால்தான் மக்கள் எதிர்பார்த்த ‘முறைமை மாற்றம்’ முழுமையடையும்!” – நேர்மை வார நிகழ்வில் ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர்

ஒரு பாடசாலையானது ஒரு நூற்றாண்டைக் கடந்து பல தலைமுறைகளுக்குக் கல்விப் பணியாற்றி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு மைல்கல்லாகும் எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் போர்ச் சூழ்நிலை மற்றும் இடப்பெயர்வு காரணங்களால் எமது பல பாடசாலைகள் தமது தனித்துவத்தை இழந்துவிட்டபோதும் இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்துநிற்பதாக தெரிவித்தார். ‘அறிவு புகட்டிய அன்னைக்கு ஓர் ஆராதனை’ எனும் தொனிப்பொருளில்

இடைக்காடு மகா வித்தியாலயம் போர் சூழ்நிலைகளுக்குள் சிக்கியிருந்தபோதும் தனது தனித்துவத்தை இழக்காமல் இன்றும் ஒரு பெரிய விருட்சமாக உயர்ந்து நிற்கிறது – கௌரவ ஆளுநர் Read More »

கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்

பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களுக்குச் சில துறைகளிலுள்ள நேர்மையீனமான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களால் ஏற்படுத்தப்படும் பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும், மிக விரைவில் அவர்களுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘பனை வளம் நிலையான வாழ்வின் பலம்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் வடக்கு மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு நிறுவனங்கள் ஆகியன இணைந்து

கூட்டுறவுச் சங்கங்களில் மிகச் சிறப்பாகச் செயற்படும் பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்கள், தங்கள் அங்கத்தவர்களின் நலனிலும் அதீத கரிசனை எடுத்துச் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர் Read More »

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

ஒரு பாடசாலையாக இருந்தாலும் சரி, வேறு எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் தலைமைத்துவத்திலேயே முற்றிலுமாகத் தங்கியிருக்கின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் இன்று (25.07.2026) சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திருமதி க.சுலபாமதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், வடக்கு மாகாண

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். Read More »

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஒன்றான ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (25.07.2026) சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் கௌரவ மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, வடக்கு மாகாணப் பணிப்பாளர் காமினி,

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தற்போது இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி இலக்கு 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் தனது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதை முக்கிய இலக்காகக் கொண்டு அதற்குரிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே உள்ளது – கௌரவ ஆளுநர் Read More »

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

எல் நினோ காலநிலைத் தாக்கத்துக்கு முகம்கொடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயக் குழுக் கூட்டங்களை உடனடியாக நடத்தி நெல் விதைப்புக்கான திகதியைத் தீர்மானிக்குமாறும், போதிய நீருள்ள குளங்களின் கீழான சிறுதானியப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்குமாறும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ‘சூம்’ தொழில்நுட்பத்தின்

எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை (Corporate Social Responsibility – CSR) வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட ஆரம்பக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மாகாண சபைக்குக் கிடைக்க வேண்டிய வருமான வழிகளில் ஒன்றாகப் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியும் காணப்படுகின்றது. எனினும், இதுவரை ஒரு சில

பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியை வடக்கு மாகாண சபைக்குப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். ‘யாழ்ப்பாண நண்பர்கள்’ அமைப்பின் ஏற்பாட்டில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்தச் சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டி இன்று (24.07.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. விளையாட்டின் ஊடாகப் பிரதேசங்களுக்கிடையிலான நல்லுறவையும் சகோதரத்துவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சிநேகபூர்வ தொடரில்,

யாழ்ப்பாணம், மலையகம் மற்றும் சென்னையைச் சேர்ந்த கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியை கௌரவ ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். Read More »