Balasingam Kajenderan

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ள நிலையில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைவாக அடுத்தகட்டமாக முன்னெடுக்க வேண்டிய நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி […]

பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகளைத் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணத்தில் சிறப்புற இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி – ஆளுநர் பங்கேற்பு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா 2026-ஐ முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று (07.09.2026) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்திய துணைத்தூதரகத்தின் அழைப்பின் பேரில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்

யாழ்ப்பாணத்தில் சிறப்புற இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி – ஆளுநர் பங்கேற்பு Read More »

யாழ்ப்பாண மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் முன்னெடுப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகளில் காணப்பட்ட நடைமுறைச் சவால்களை விரைந்து தீர்த்து, உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகளை முன்னெடுக்குமாறு வழங்கப்பட்ட பணிப்புரையின் தொடர்ச்சியாகவே இந்நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் அடிப்படையில், கந்தரோடை குளம்,

யாழ்ப்பாண மாவட்டக் குளங்களைத் தூர்வாரும் பணிகள் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கேற்புடன் முன்னெடுப்பு Read More »

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு 09ஆம் திகதி விடுமுறை வழங்க ஆளுநர் அறிவுறுத்தல்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் புதன்கிழமை (09.09.2026) விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை அறிவுறுத்தியுள்ளார். நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கௌரவ ஆளுநரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலித்த ஆளுநர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பொருத்தமான

நல்லூர் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கு 09ஆம் திகதி விடுமுறை வழங்க ஆளுநர் அறிவுறுத்தல் Read More »

“வாசிப்பு அழிந்து போகவில்லை; அதன் வடிவம் மாறியுள்ளது” – யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழாவில் ஆளுநர்

ஒரு மனிதன் அறிவிலும் சிந்தனையிலும் முழுமையடைவதற்கு வாசிப்பு இன்றியமையாதது. அறிவைத் தேடும் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டிய ஒன்றாகும். வாசிப்புப் பழக்கத்தை அடுத்த தலைமுறையிடம் வளர்ப்பதற்கு முன்னர், பெரியவர்களான நாமே வாசிப்பை எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், இந்திய துணைத் தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இன்று

“வாசிப்பு அழிந்து போகவில்லை; அதன் வடிவம் மாறியுள்ளது” – யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழாவில் ஆளுநர் Read More »

தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் நூற்றாண்டு விழா கோலாகலம் – கிராமிய மக்களின் பொருளாதார வலுவூட்டலில் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தல்

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும், குறைந்த வட்டி விகிதத்தில் நிதி வசதிகளை வழங்கக்கூடிய வலுவான கூட்டுறவு அமைப்புகள் அவசியம். மக்களைப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கும் நுண்நிதி நிறுவனங்களுக்கு மாற்றாகவும், மக்களின் நலனை முன்னிறுத்தும் வலுவான நிறுவனங்களாகவும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் 1926–2026 நூற்றாண்டு விழா இன்று (06.09.2026) ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் மூளாய்

தொல்புரம் மூளாய் ஐக்கிய பரஸ்பர சகாய சங்கத்தின் நூற்றாண்டு விழா கோலாகலம் – கிராமிய மக்களின் பொருளாதார வலுவூட்டலில் கூட்டுறவுத்துறை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தல் Read More »

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது – கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பை ஆளுநர் பாராட்டு

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைவதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது. போருக்குப் பின்னரான வடக்கு மாகாணத்தின் மீள்குடியமர்வு மற்றும் மக்கள் தமது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கான செயன்முறைகள் விரைவாக இடம்பெறுவதற்கு கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பும் மனிதநேயப் பணியும் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளன என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகச் சந்திப்பு நேற்று (04.09.2026)

‘கண்ணிவெடிகளற்ற இலங்கை’ என்ற இலக்கை அடைய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருகிறது – கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் அர்ப்பணிப்பை ஆளுநர் பாராட்டு Read More »

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்

வவுனியா மாநகர சபைக்கு நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர்

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு அத்தொகையை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04.09.2026) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர், மாவட்ட

பாடசாலைகளுக்கான மின்சாரக் கட்டண ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டிலிருந்து அதிகரிக்க சாதகமாகப் பரிசீலனை – ஆளுநர் Read More »

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையிடம் ஆளுநரால் நேரடியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இத்திட்டத்தின் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில்

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை Read More »