எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர்
வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தனது தொடக்கவுரையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு […]
