Balasingam Kajenderan

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம்

விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கமநல சேவைகள் திணைக்களம் வழங்கியுள்ள நேர்மறையான இணக்கப்பாடுகள், எமது மாகாண விவசாயிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கமநல சேவைகள் […]

கௌரவ ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கமநல சேவைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் வடக்கிற்கு விஜயம் Read More »

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தை

ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைக்கப்பட்ட புதிய சமூகப் பராமரிப்பு நிலையம் கௌரவ ஆளுநரால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தின் விவசாயம், கடற்றொழில், காணி உரிமை மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (13.05.2026) புதன்கிழமை காலை கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள ‘றீச்சா பார்க்’ வளாகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணத்தின் சமகால நிலவரங்கள், விவசாய மற்றும்

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. Read More »

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர்

சிறுபோக நெற்செய்கைக்காக அரச காணிகளைப் பங்கீடு செய்யும் போது, வறுமை நிலையில் உள்ள விவசாயிகளும் பயன்பெறும் வகையிலேயே அப்பங்கீடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12.05.2026) செவ்வாய்க்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்டச் செயலாளர் கே.கனகேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி

வறுமை நிலையிலுள்ள விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெற் செய்கைக்கான காணிப் பங்கீடுகள் அமைய வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், வட மாகாண மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகள் மற்றும் மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த அமைப்பால் பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் Read More »

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார். பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் பெறுமதி சேர் உற்பத்திகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போதே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலின் போது, நடப்பு ஆண்டில் பனங்கள் ஏற்றுமதி இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை எனப் பனை அபிவிருத்திச்

போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளை உடனடியாகக் களைந்து, ஏற்றுமதி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர்

சமூகமட்ட அமைப்புகள் மூத்தோரின் முதிர்ந்த அறிவுரைகளுடன் இளையோர்களால் வழிநடத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகள் மறைந்து அறநெறி தழைத்தோங்கும். இத்தகைய தன்னியக்கக் கண்காணிப்புப் பொறிமுறை எமது மாகாணத்தின் பல கிராமங்களில் நலிவடைந்து வருவது கவலையளிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 106ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சங்கத்தின் தலைவர் கி.கிருஸ்ணதாசன் தலைமையில் நேற்று (09.05.2026) சனிக்கிழமை மாலை

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர் Read More »

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூராட்சி மட்டத்தில் காலநிலை ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உணர்வுள்ள உள்ளூர் ஆட்சி முன்னோடித் திட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று (09.05.2026) சனிக்கிழமை ஆரம்பமானது. ஜனநாயக மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IDAG),

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இயந்திரமயமான வாழ்வில் சிக்கி ஓடிக்கொண்டு மன அழுத்தங்களையும் மனச்சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் இவ்வாறான இசை நாடக கூத்துக்கள் மிகப் பெரிய வலிநீக்கியாக – புத்துணர்வு ஊட்டுவதாக இருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது Read More »

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள்,

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். Read More »