Balasingam Kajenderan

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர்

வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வெறுமனே ஒரு வர்த்தகக் கண்காட்சியாக நான் பார்க்கவில்லை. இது வடக்கு மாகாணத்தின் தொழில் முயற்சித் திறனை வெளிப்படுத்தும் மேடையாகவும், எமது உற்பத்திகளைச் சந்தையுடன் இணைக்கும் பாலமாகவும், முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்துக்கு அழைக்கும் வாயிலாகவும் அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026 இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில், வடக்கு கைத்தொழில் மன்றத்தின் தலைவர் எஸ்.நகுலேஸ்வரன் தலைமையில் […]

வடக்கு மாகாண உற்பத்திகளை உலகச் சந்தையுடன் இணைக்கும் பாலமாக வடக்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – ஆளுநர் Read More »

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும். அதன் நடைமுறைப்படுத்தலில் காணப்படும் சவால்கள் மற்றும் தாமதங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதுடன், தொடர்புடைய அதிகாரிகளின் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி இப்பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் முதலீடுகளை இலகுபடுத்தும் நோக்கில்

வடக்கு மாகாண ஒருவழி முதலீட்டு நுழைவாயிலின் செயற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Read More »

அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன்

ஒரு சிறந்த நூலைப் படைப்பதற்கு அறிவு மாத்திரம் போதாது, யதார்த்தத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அனுபவமும் அவசியம். அனுபவமும் அறிவும் ஒன்றிணையும் போதுதான் ஒரு நூல் சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையில் சிறப்புறும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ‘குழந்தைமைக் கல்வியும் ஆரம்பக் கல்வியின் செயற்பாடுகளும்’ மற்றும் ‘புலம்பெயர் நாடுகளில் இலங்கைத் தமிழ்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம

அனுபவமும் அறிவும் இணையும்போதுதான் சிறந்த நூல் உருவாகும் – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்பு; ஆளுநர் வாழ்த்து

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு இன்று (26.08.2026) புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு புதிய ஆயருக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். புதிய ஆயரின் பணிப்பொறுப்பேற்பை முன்னிட்டு நடைபெற்ற மத நிகழ்வில் மறைமாவட்டத்தின்

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை பொறுப்பேற்பு; ஆளுநர் வாழ்த்து Read More »

தேசிய மீலாதுன் நபி விழா – கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

‘மனிதகுலத்துக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்’ என்ற புனித குர்ஆன் வசனத்தின் மகத்தான பொருளை நினைவுகூரும் புனிதமான நாளாக மீலாதுன் நபி தினம் அமைகிறது. நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் பிறப்பையும், அவர்களின் உயரிய வாழ்வியல் நெறிகளையும் நினைவுகூரும் இந்நன்னாளில், வடக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கும், இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் எனது உளமார்ந்த மீலாதுன் நபி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனிதகுலத்துக்கு எடுத்துக்காட்டாகக் காட்டிய அன்பு, இரக்கம்,

தேசிய மீலாதுன் நபி விழா – கௌரவ வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது நீதிக்கான போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவரப் பயன்படாது எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் Read More »

திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் ஒழுங்குமுறை; உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நியமத்துணைவிதிகளை உருவாக்கத் தீர்மானம்

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வானவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும், இதற்கு மேலதிகமாக மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் தேவையான சட்ட ஏற்பாடுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற

திருவிழாக்களில் அதீத ஒளி, வானவேடிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தில் ஒழுங்குமுறை; உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நியமத்துணைவிதிகளை உருவாக்கத் தீர்மானம் Read More »

சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் நலன் கருதி தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநரும் கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை தாமதமின்றி வழங்கி, அவற்றின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகளையும் பிரதேச அபிவிருத்தியையும் உருவாக்க வேண்டும். திட்டங்கள் தொடர்பில் மக்களிடையே காணப்படும் சந்தேகங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு விஞ்ஞானபூர்வமான விளக்கங்களை வழங்கி தெளிவுபடுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்

சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்கள் மக்கள் நலன் கருதி தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் – ஆளுநரும் கடற்றொழில் அமைச்சரும் வலியுறுத்தல் Read More »

மு. கனகரட்ணம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் மருதனார்மடத்தில் திறந்து வைப்பு

இலங்கை அரச கடற்படையின் (Royal Ceylon Navy) முன்னாள் மதிப்பிற்குரிய உறுப்பினராகப் பணியாற்றிய மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மு.கனகரத்தினம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் இன்று (25.08.2026) செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மு.கனகரத்தினத்தின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பேருந்து தரிப்பிடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

மு. கனகரட்ணம் நினைவுப் பேருந்து தரிப்பிடம் மருதனார்மடத்தில் திறந்து வைப்பு Read More »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு மாகாணத் திட்டங்களைப் பார்வையிட வந்த ஊடகக் குழு ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் நீர் வழங்கல் மற்றும் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டங்களின் பெறுபேறுகள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயன்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்படும் ஊடகப் பயணத்தின் ஒரு பகுதியாக வடக்கு மாகாணத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் அழைத்து வரப்பட்ட ஊடகக் குழுவினர், மாகாணத்தின் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகனுடன் கலந்துரையாடினர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் வடக்கு மாகாணத்தில்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வடக்கு மாகாணத் திட்டங்களைப் பார்வையிட வந்த ஊடகக் குழு ஆளுநருடன் சந்திப்பு Read More »