Balasingam Kajenderan

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது

தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.04.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் […]

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது Read More »

எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

சமூகமாக இணைந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் எப்படிச் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றீர்கள். அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இங்கிருந்து மாணவர்களை அனுப்பியுள்ள நீங்கள், தற்போது மருத்துவபீடத்துக்கும் மாணவர்களை அனுப்பியுள்ளமை பெருமைக்குரியதாகும். உங்களின் இந்தச் சிறப்பான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டு விழாவும், சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் கலைமகள் கலையரங்கில் கழகத் தலைவர் நீலவண்ணன்

எந்தவொரு நிறுவனத்தினதும் வளர்ச்சிப் பாதைக்கு, அதன் தலைமைத்துவமும் நிர்வாகத்தினரின் ஒற்றுமையுமே மிக அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

மலரும் சித்திரைப் புத்தாண்டை உவகையுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், இயற்கையோடு இணைந்ததாக, சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, எமது பாரம்பரியத்தோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்த ஓர் உன்னதத் திருநாளாகும். தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒரே நன்னாளில் இணைந்து கொண்டாடும் இப்பண்டிகையானது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பரஸ்பர

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி Read More »

வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்க தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில்

வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்க தீர்மானம் Read More »

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை

கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் கிளிநொச்சி மாவட்ட மணல் மற்றும் கிரவல் விநியோகக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் தலைமையில்

மணல் பெறக்கூடிய இடங்களை அடையாளப்படுத்தல், சேகரித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகிய பொறிமுறைகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முன்னுரிமை Read More »

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர்

ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கு அதன் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது. சாவகச்சேரி இந்துக் கல்லூரி அந்த வகையில் மிகவும் சிறப்பானதொரு பழைய மாணவர் சமூகத்தைப் பெற்றிருக்கின்றது. அந்தப் பழைய மாணவர்களின் அளப்பரிய பங்களிப்பின் ஊடாகவே இக்கல்லூரி கல்வியிலும் பௌதீக வளத்திலும் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 3 மாடிகளையும், 30 வகுப்பறைகளையும் கொண்ட புதிய கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுகை நிகழ்வு, கல்லூரி

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு மனித வளம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குப் பௌதீக வளமும் அவசியமானதாகும். – கௌரவ ஆளுநர் Read More »

காகில்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதோடு மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது மிகவும் சிறப்பானது. – கௌரவ ஆளுநர் பாராட்டு

விவசாயிகளிடமிருந்து உற்பத்திப் பொருட்களை நேரடியாகக் கொள்வனவு செய்வது மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்துக்கும் உதவும் கார்கில்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடு மிகவும் பாராட்டத்தக்கது எனவும், இத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கார்கில்ஸ் நிறுவனத்தின் ‘சருபிம’ கல்வி உதவித்தொகை விநியோகம் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு, யாழ்ப்பாணம் கார்கில்ஸ் சதுக்கத்தில் அமைந்துள்ள ரீகல் திரையரங்கில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை காலை

காகில்ஸ் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்வதோடு மாத்திரமன்றி, அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது மிகவும் சிறப்பானது. – கௌரவ ஆளுநர் பாராட்டு Read More »

“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது”

தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, இன்று (08.04.2026) புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

“நிர்மாணிகள் சஞ்சிகை கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களால் வெளியிடப்பட்டது” Read More »

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read More »

வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர

வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »