பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
பூநகரி, கௌதாரிமுனைப் பிரதேசத்தை ஒரு சிறந்த சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (26.06.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கௌதாரிமுனையைச் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் விசேட வரைவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்துக்கு அமைவாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, இத்திட்டத்திற்கான முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இன்றைய […]
