Balasingam Kajenderan

பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம்

அழிந்து வரும் எமது பாரம்பரியக் கலைகளை மீட்டெடுத்து அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பதற்கும், இளைய கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்குமான சிறந்ததொரு களமாகப் ‘பாரம்பரிய கலைச்சங்கமம்’ அமைந்துள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் உள்ள பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வடக்கு மாகாணத்தில் மறைந்து வரும் மற்றும் காலப்போக்கில் திரிபடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில், நல்லூர் திருவிழாக் காலத்தை முன்னிட்டு நேற்றிரவு (23.08.2026) ஆரம்பித்து வைக்கப்பட்ட […]

பாரம்பரிய கலைச்சங்கமம் ஆரம்பம் Read More »

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில் இளையோர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி ஏனைய வீதிப் பயனாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் மேலும் தீவிரமான நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தினார். வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் புதிதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராகப் பொறுப்பேற்றுள்ள தினேஸ்

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் நியமனம்

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் இன்று (24.08.2026) திங்கட்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராகப் பணியாற்றிய திருமதி சுஜீவா சிவதாஸ் மத்திய அரசின் சேவைக்காக விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இப்பதவிக்கான புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்நிகழ்வில் வடக்கு மாகாண

வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் நியமனம் Read More »

ஜனாதிபதி நிதியத்தினூடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்: கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வழங்கி வைத்தார்!

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாகத் தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் மற்றும் காசோலைகள் வழங்கும் விசேட நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.08.2026) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்.

ஜனாதிபதி நிதியத்தினூடாக விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்: கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வழங்கி வைத்தார்! Read More »

55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழக விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய நான்கு மாடி விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (22.08.2026) சிறப்பாக நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்

55 புதிய மாணவர் விடுதித் திட்டங்களின் கீழ், முதலாவது விடுதியாக வவுனியாப் பல்கலைக்கழக விடுதிக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா Read More »

2027-க்குள் முகமாலையில் கண்ணிவெடிகள் முற்றுமுழுதாக அகற்றப்படும்: விசேட கூட்டத்தில் உறுதி

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் தலைமையில் இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்

2027-க்குள் முகமாலையில் கண்ணிவெடிகள் முற்றுமுழுதாக அகற்றப்படும்: விசேட கூட்டத்தில் உறுதி Read More »

வடக்கு மாகாண நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: விரைவான மக்கள் சேவைக்கான புதிய நகர்வு

செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாண நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு: விரைவான மக்கள் சேவைக்கான புதிய நகர்வு Read More »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டுமானம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகக் காணப்படுவதுடன், தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகள் விரைவாகக் கிடைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இஷேபிள் மார்ட்டின் தெரிவித்தார். வடக்கு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்கட்டுமானம், அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

வவுனியா, கிளிநொச்சி மற்றும் மல்லாவி மருத்துவமனைகளின் சிறுநீரக சிகிச்சை வசதிகளை வலுப்படுத்த ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள்

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு குருதி சுத்திகரிப்பு இயந்திரம் என்பது ஒரு மருத்துவ உபகரணம் மாத்திரமல்ல, தொடர்ந்தும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை வடக்கு மாகாண மக்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் வாழும் நோயாளிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 83,544 கனேடிய டொலர் பெறுமதியான ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்படுவது மிகவும் பெறுமதியான மனிதநேயப் பங்களிப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இவ்வியந்திரங்கள் வவுனியா மற்றும் கிளிநொச்சி

வவுனியா, கிளிநொச்சி மற்றும் மல்லாவி மருத்துவமனைகளின் சிறுநீரக சிகிச்சை வசதிகளை வலுப்படுத்த ஆறு குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் Read More »

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல் விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோகத்தில் அதிகூடிய நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் நெல் கொள்வனவு பொறிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். திறைசேரியால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக வட்டியில்லாக் கடன் அடிப்படையில் நெல் கொள்வனவை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல் விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »