‘கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக’ அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக’ விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கிராம ஒளிவாழ்வுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள், எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. […]
