அறிவித்தல்கள்

பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார்.

லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பான முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், எதிர்காலத்தில் பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அத்துடன், லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் சிறப்பாகச் செயலாற்றி வருவதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, […]

பொலித்தீன் மற்றும் ஒரு நாள் பாவனைக்குரிய பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றின் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார். Read More »

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி

தற்பொழுது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளால் இடைப்போகப் பயிர்ச்செய்கைக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இவ் இடைப்போகச் செய்கைக்கான மறுவயல் பயிர் விதைகள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் நடமாடும் சேவையின் ஊடாக விற்பனை செய்ப்பட்டு வருகின்றது. நடமாடும் விற்பனையில் தேவையான விதைகள், மரக்கறி நாற்றுக்கள், பழ மரக்கன்றுகள், மற்றும் சேதன விவசாயத்திற்கான திரவ பசளை மற்றும் தாவர பீடை நாசினி போன்றன விற்பனை செய்யப்படுவதுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் உள்ளிட்ட விவசாயம் தொடர்பான

மாகாண விவசாயத் திணைக்களத்தின் நடமாடும் சேவை – பெப்ரவரி Read More »