SLAITO-sin
யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் முழுமையான வெற்றியடைவதற்குச் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடத்தியது. […]
