Uncategorized
உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்
இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (24.12.2024)
உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 18.12.2024 அன்று புதன்கிழமை மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் Read More »
PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது
முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல்
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »
வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023
வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சினால் மரநடுகை மாதத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வானது 24.11.2023 ஆம் திகதியன்று காலை 10.30 மணியளவில் கோண்டாவில் மாநகர குடிநீர் விநியோக திட்ட வளாகத்தினுள் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் 100 தேக்கு மரக்கன்றுகளை நாட்டி வைக்கும் நிகழ்வானது இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஆர்.ரி.ஜெயசீலன் அவர்களும் அமைச்சின் உதவிச் செயலாளர்,அமைச்சின் பிரதம கணக்காளர், அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், மாநகரசபை உத்தியோகத்தர்கள்
வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சு மரநடுகை நிகழ்வு 2023 Read More »
வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி
வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. வட மாகாணத்தின் இடர்முகாமைத்துவம், மக்களின் அன்றாட வாழ்வியல் நிலை, காலநிலை, பொருளாதாரம், மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் இதன்போது சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விடயங்களை கேட்டறிந்துக்கொண்ட ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம்,
சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு
வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மற்றும் வைத்திய அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் 31.07.2023 அன்று கலந்துரையாடப்பட்டது. சேவை நாடுவோருக்கான சிகிச்சை, முகாமை மற்றும் புனர்வாழ்வு என்ற விடயங்கள் சுகாதார சேவை நிலையங்களில் ஒரே விதமாக நோக்கப்படலாகாது என்றும் அவை வௌ;வேறான முறைமைகள் ஊடாக அணுகவேண்டியவை என்பதை
சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு Read More »
இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல்
மேற்படி கலந்துரையாடலானது கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 25.05.2023 (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு.ஸ்ரீ ராஜேஷ் நட்ராஜ் மற்றும் அவரது குழுவினரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான கலந்துரையாடல் Read More »
வட மாகாண எழுத்தாளர் அவை – 2022
கௌரவ வடமாகாண ஆளுநரின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து பண்பாட்டு நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாண எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் “வடமாகாண எழுத்தாளர் அவை” அங்குரார்ப்பணநிகழ்வு 07.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 09.00 மணியளவில் யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் மங்கல விளக்கேற்றலுடனும், அகவணக்கத்துடனும் நிகழ்வானது இனிதே
வட மாகாண எழுத்தாளர் அவை – 2022 Read More »