Uncategorized

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘சிசு செரிய’ பஸ் சேவையின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட் கிழமை (15.06.2026) வவுனியா பேருந்து நிலையத்தில்இடம்பெற்றது. கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும் வன்னி தேர்தல் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ உபாலி சமரசிங்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், வவுனியாவிலிருந்து செட்டிக்குளம் வரையான வழித்தடத்தில் மாணவர்களுக்கான விசேட போக்குவரத்துச் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார […]

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் ‘சிசு செரிய’ பஸ் சேவை வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read More »

எந்தவொரு பாடசாலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர்.

‘பல்கலைக்கழகத்துக்கு அதிக எண்ணிக்கையான மாணவர்களை அனுப்புவதில் ஒரு பாடசாலைக்குப் பெருமை கிடையாது. எத்தனை மாணவர்களைத் தமது சமூகத்துக்குச் சேவை மனப்பாங்குடன் பணியாற்றுவதற்கு வழங்கியுள்ளோம் என்பதில்தான் ஒரு பாடசாலைக்கு உண்மையான பெருமை கிடைக்கும்’ என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் 75ஆவது ஆண்டு ‘பவள விழா’ நிகழ்வுகள் நேற்றும் இன்றும் கோலாகலமாக நடைபெற்றன. இதன் இரண்டாம் நாளான இன்று (06.06.2026) சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற விசேட

எந்தவொரு பாடசாலையின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் அதிபரில்தான் தங்கியிருக்கின்றது. – கௌரவ ஆளுநர். Read More »

ஆளுநர் செயலக ஊடக அறிக்கை

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.

ஆளுநர் செயலக ஊடக அறிக்கை Read More »

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத்

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது. வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம் Read More »

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா

கடந்த 28.01.2026 அன்று PSDG 2025 திட்டத்தின் கீழான பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழான நெற்ச்செய்கைக்கான வயல்விழா நிகழ்வானது புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசங்குளம் கிராமத்தில் தொழில்நுட்ப உதவியாளர் க.துருபதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் அத்தாட்சிபடுத்தல் சேவையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி விவசாயப்

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா Read More »

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (30.09.2025) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன்,

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள், நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று, எடுக்கப்பட்ட முடிவு நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது Read More »

யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேடு இணைக்கப்பட்டுள்ளது

யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேடு இணைக்கப்பட்டுள்ளது Read More »

உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (24.12.2024)

உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »