Uncategorized

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை (23.03.2026) மாலை பலாலியில் அமைந்துள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் பொதுமக்களின் பாவனைக்காகக் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர், தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கட்டளைத் […]

யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பீ.டி.சில்வா மற்றும் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையே விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது. வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம் Read More »

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா

கடந்த 28.01.2026 அன்று PSDG 2025 திட்டத்தின் கீழான பரசூட் முறையிலான நெற்ச்செய்கை மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் வழிகாட்டலின் கீழ் நெல் வர்க்க ஊக்குவிப்பு திட்டத்தின் கீழான நெற்ச்செய்கைக்கான வயல்விழா நிகழ்வானது புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசங்குளம் கிராமத்தில் தொழில்நுட்ப உதவியாளர் க.துருபதன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர், விதைகள் அத்தாட்சிபடுத்தல் சேவையின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி விவசாயப்

புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் பரசூட் முறையிலான நெற்ச்செய்கை அறுவடை வயல்விழா Read More »

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (30.09.2025) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி கௌரவ அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெ.றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பொருளாதார மத்திய நிலையத்தை நாடாவெட்டி திறந்து வைத்ததுடன்,

யாழ். விசேட பொருளாதார மத்திய நிலையம் மட்டுவிலில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டது Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள், நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று, எடுக்கப்பட்ட முடிவு நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது Read More »

யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேடு இணைக்கப்பட்டுள்ளது

யாழ். மாநகர சபையால் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேடு இணைக்கப்பட்டுள்ளது Read More »

உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார்

இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். இராணுவத்தின் 51ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 513ஆவது பிரிகேட்டின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க் கிழமை (24.12.2024)

உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் கலந்து சிறப்பித்தார் Read More »

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 18.12.2024  அன்று புதன்கிழமை மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் Read More »

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது

முன்பள்ளி மற்றும் ஆரம்ப பாடசாலை சிறார்களின் ஆங்கிலம் தொடர்பிலான எழுத்தாற்றல் வாசிப்பு மற்றும் இதர திறமைகளை மேம்படுத்தும் நோக்கோடு PIMD Lotus நிறுவனத்தினரால் ‘சிறார்களிற்கான ஆங்கிலமொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு’ எனும் தலைப்பிலான செயற்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் 18.07.2024 திகதி அன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் PIMD Lotus அரச சார்பற்ற நிறுவன தலைவர், ஒருங்கிணைப்பாளர், உதவிக் கல்விப்

PIMD Lotus நிறுவனத்தினால் சிறார்களிற்கான ஆங்கில மொழி எழுத்தாற்றல் செயற்திட்டம் மற்றும் ஆசிரியர்களிற்கான பயிற்சி ஆய்வு நடாத்தப்பட்டது Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சிறந்த முறையில் பொதி செய்து வியாபாரம் செய்வதற்கு ஏற்ற வகையில் EX-PACK CORRUGATED CARTONS PLC  நிறுவனத்தினால் 20.02.2024 செவ்வாய்க்கிழமை கிறீன்கிறாஸ் ஹோட்டலில் பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு மு.ஸ்ரீமோகன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) யாழ்ப்பாண மாவட்டம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். குறித்த பயிற்சி நெறியில் வடமாகாணத்தை சேர்ந்த 31 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு நவீன முறையிலான கார்போட் பொதி செய்தல்

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களிற்கான பொதியிடல் பயிற்சி Read More »