விவசாய அமைச்சு

“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா

காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம் எனும் தொனிப்பொருளில் வயல் விழா கிளிநொச்சி மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் வட்டக்கச்சியில் 20.05.2026 புதன்கிழமை அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சோ. திருமதி.சோ.விஜயதாசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, சிறப்பு விருந்தினராக தெ.யோகேஸ்வரன், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் வடமாகாணம், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(ஆராய்ச்சி) எஸ்.இராஜேஸ்கண்ணா, திரு.பா.தேவரதன், கமநல பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் […]

“காலநிலையை வென்று விளைச்சலைப் பெருக்குவோம்!” வயல் விழா Read More »

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள்

தேனீக்களின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டு மே 20 முதன்முறையாக உலக தேனீ தினமானது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டது. 2026 ஆம் ஆண்டின் உலக தேனீ தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வுடன் கூடிய களச்செயற்பாட்டு விழாவானது வடமாகாண விவசாயத்திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் ஆலங்குளம் கிராமத்தில் விவசாயப் போதனாசிரியர் திரு. க. ஜெனோஜன் அவர்களின் ஏற்பாட்டிலும், முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி சி. கிருபவதனி அவர்களின் தலைமையிலும்,

உலக தேனீக்கள் தினம் – தேனீ வளர்ப்பு தொடர்பிலான வயல்விழா நிகழ்வுகள் Read More »

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்

விவசாய இரசாயன விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலையத்தில் 13.05.2026 ஆம் திகதி யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறிரங்கன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் மற்றும் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ் மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் அவர்கள் யாழ் மாவட்டத்தில் காணப்படும்

விவசாய இரசாயன விற்பனையாளர்களுக்கான விவசாய இரசாயன விற்பனை நிலையங்களை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்துரையாடல் Read More »

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கோணாவில் எனும் இடத்தில் ம.விமலநாதன், க.பிரதீபன் என்பவர்களின் வயல் துண்டத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியத்தில் ‘சிறுதானிய செய்கையை ஊக்குவிக்கும் செயற்திட்டம்’ எனும் தொனிப்பொருளில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா 12.05.2026. அன்று காலை 10.00 மணியளவில் விவசாயப் போதனாசிரியர் திருமதி.கிருபாகரன்.சுதர்சினி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு.எஸ். முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், திரு.க.இராஜேஸ்கண்ணா, மேலதிக பணிப்பாளர் (ஆராய்ச்சி), திருமதி.சோ.விஜயதாசன்

கோணாவில் பிரதேசத்தில் கம்பு மற்றும் இறுங்கு அறுவடை விழா Read More »

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல்விழா 10.04.2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பிரதி விவசாய பணிப்பாளர் திருமதி.பி.ரமணேந்திரன் அவர்களின் தலைமையின் கீழ் சிறப்பாக பாரம்பரிய விவசாய முறைகளுடன் நவீன மற்றும் நீடித்த தொழில் நுட்பங்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நெல் அறுவடை வயல் விழா இடம்பெற்றது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் திரு.க.கனகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக

சூழல் நேய பன்முக விவசாயம் மற்றும் நெல் அறுவடை வயல் விழா Read More »

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் கல்மடுநகர் பிரதேசத்தில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் திருமதி.கி.சரண்யா அவர்களின் ஒழுங்கமைப்பில் சி.தங்கராசா என்பவரின் வயல் துண்டத்தில் திருமதி.இ.மாலினி (பா.உ- பழப்பயிர்) தலைமையில் டித்வா அழிவின் பின்னராக மரக்கறிச்செய்கையின் கலப்பு பயிர்ச்செய்கையின் வயல்விழா 08.05.2026 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி. சோ.விஜயதாசன் அவர்களும், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள்,, கமக்கார அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் மரக்கறி பயிர்களான

கலப்பு பயிர்ச்செய்கை வயல்விழா – கல்மடுநகர், கிளிநொச்சி Read More »

விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களமும் வடக்கின் பாரம்பரிய உணவகமும் இணைந்து உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் மல்லாவியில் அமைந்துள்ள விவசாயிகள் பயிற்சி நிலையத்தில் 07.05.2026 வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி கிருபவதனி சிவதீபன், தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், திரு.ச.சிவசிறிஇ சிறப்பு விருந்தினராக மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.தெ.யோகேஸ்வரன் துணுக்காய் பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர், வங்கி முகாமையாளர்கள் மல்லாவி

விவசாயிகள் பயிற்சி நிலையம் மல்லாவியில் உணவுத் திருவிழாவும் வயல் விழாவும் நடைபெற்றது Read More »

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா

கிளிநொச்சி மாவட்டத்தில் உவரத்தன்மையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களுக்கு பொருத்தமான புதிய நெல் இனங்கள் அறிமுகம் தொடர்பான முன்மாதிரித்துண்டத்திற்குரிய வயல் விழாவானது 18.03.2026 அன்று D8 பெரிய பரந்தனில் குமரபுரம் விவசாயப்போதனாசிரியர் திருமதி.ம.எழினி தலைமையில் நடைபெற்றது. கைகளினால் நாற்று நடுகை செய்யப்பட்ட உவரிற்கு தாங்கும் திறன் கொண்ட 3½, 4 மாத நெல் இனங்களாகிய AT 354, Bg369, IS Bg sl 20- Ay3, IS Bg sl 19- 182 ஆகியன அன்றைய தினம் விவசாயிகளுக்கு

உவர் நிலங்களுக்கு பொருத்தமான நெல்லினங்களின் அறிமுகம் முன்மாதிரித்துண்ட வயல்விழா Read More »

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலகத்தின்; தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் யூனியன் விழுதுகள் இளைஞர் விவசாயக் கழகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இயந்திர நெல் நாற்று நடுகையின் 2026 சிறுபோகத்திற்கான ஆரம்பவிழாவானது வன்னேரிக்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவில் 16.03.2026 அன்று நடைபெற்றது. வன்னேரிக்குளம் தொழில்நுட்ப உதவியாளர் T.துசாந் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் திருமதி சோ.விஜயதாசன்- பிரதி விவசாயப்பணிப்பாளர், பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், யூனியன் விழுதுகள் கழக உறுப்பினர்கள் விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேற்படி

நெல் நாற்று நடுகை வயல் விழா – வன்னேரிக்குளம் Read More »

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வர்க்கங்கள் மற்றும் சிவப்பு நெல் வர்க்கங்கள் அதிகளவில் செய்கை பண்ணப்பட்டு வந்த நிலையில் இம்முறை கைதடி விவசாயப்போதனாசிரியர் பிரிவில் நாவற்குழி கிழக்கில் திரு தங்கராஐh அவர்களின் வயலில் Ld-368 சிவப்பு சம்பா 3 ½ மாத வயது வர்க்கம் ஒரு ஏக்கர் விஸ்தீரணத்தில் பரீட்சார்த்த ரீதியில் விதை உற்பத்தியாக மேற்கொள்ளப்பட்டது. இதன் அறுவடை விழா 03.02.2026 அன்று கைதடி விவசாயப்போதனாசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திருமதி.சு.செந்தில்குமரன் மாகாண விவசாயப்பணிப்பாளர்(வ.மா)

புதிய நெல் வர்க்க அறிமுகம் Ld-368 அறுவடை விழா Read More »