“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகின்றது. தலைமைத்துவப் பண்பு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பாடப்புத்தகக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் (Co-curricular Activities) மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தேசிய மாணவர் படையணியின் (National Cadet Corps) ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் அப்படையணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால […]
