ஆளுநர்

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுப்பதே இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு செயற்பாடாகக் காணப்படுகின்றது. தலைமைத்துவப் பண்பு இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது. பாடப்புத்தகக் கல்வியுடன் இணைந்து, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் (Co-curricular Activities) மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமே அவர்களின் தலைமைத்துவப் பண்பினை வளர்த்தெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தேசிய மாணவர் படையணியின் (National Cadet Corps) ஏற்பாட்டில், வடக்கு மாகாணத்தில் அப்படையணியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால […]

“எமது சமூகம் புத்தகக் கல்வியையும் பரீட்சைகளின் பெறுபேறுகளையும் வைத்து மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதே தவிர, மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதில்லை. – கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களது முதலீட்டுத் திட்டங்களுக்கான நடைமுறைகளை இலகுபடுத்தும் நோக்கிலான விசேட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (17.03.2026) நண்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. Management Club Investment Forum உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இக் கலந்துரையாடலில், வடக்கு மாகாணத்திற்கான முதலீட்டுத் திட்டங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில் அவற்றை டிஜிட்டல் மயப்படுத்தி கையாள்வதற்காக, வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுவரும் ” One Stop Shop Investment

வடக்கு மாகாணத்தில் முதலீட்டாளர்களைக் கவர்ந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டுமாயின், இங்குள்ள நிர்வாக ரீதியான செயற்பாடுகள் உடனடியாக இலகுபடுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர்

“கண்ணுக்குத் தெரியாத டெங்கு உள்ளிட்ட நோய்க் கிருமிகளை நம்மால் ஒன்றிணைந்து ஒழிக்க முடிகின்ற போது, கண்ணுக்குத் தெரிகின்ற பாத்தீனியத்தை ஏன் உரிய துறைசார்ந்தவர்களால் இவ்வளவு காலமும் ஒழிக்க முடியவில்லை?” எனக் கேள்வி எழுப்பிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், உயிர் கொல்லும் நச்சுச் செடியான பாத்தீனியத்தை ஒழிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் அழிக்க முடியாத பெரும் களையாக உருவெடுத்துவரும் பாத்தீனியத்தை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது

பாத்தீனியம் ஆபத்தான ஒரு நச்சுச் செடியாகும்.தொடர்ச்சியாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குத் தீவிரமாகக் கண்காணித்து அழிப்பதன் ஊடாகவே இதனை முழுமையாக ஒழிக்க முடியும்” – கௌரவ ஆளுநர் Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது

மனிதர்கள் பின்பற்றுகின்ற மதங்கள் வெவ்வேறானவையாக இருந்தாலும், அவை போதிக்கும் நெறிமுறைகளும் சென்றடையும் வழியும் ஒன்றானவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணமானது சகல இன, மத மக்களின் பாரம்பரியங்களையும் சமமாக மதித்து, அவர்களது பண்டிகைகள் மற்றும் விழாக்களைச் சிறந்த முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்விசேட இப்தார் நிகழ்வு இடம்பெற்றது Read More »

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன

வடக்கு மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் கௌரவ அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் புனரமைக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபா செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து

வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன Read More »

1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர்

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளைப் பயன்படுத்தி, உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் மூலதனமாக்கி எவ்வாறு சிறப்பாகச் செயற்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் உங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கான தீர்மானங்கள் அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நெல் சுத்தப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14.03.2026)

1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர் Read More »

திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் ‘மேட் இன் முல்லைத்தீவு’ ஆகிய இரு நிலையங்களும் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது

சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சந்தைப்படுத்தல் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், உள்ளூர் உற்பத்திகளை யாழ்ப்பாணத்திலிருந்து நேரடியாகப் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒழுங்குகளை இலங்கைச் சுங்கத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புனிதப் பிரதேசமான திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் முல்லைத்தீவு உற்பத்திகளின் விற்பனை நிலையமான ‘மேட் இன் முல்லைத்தீவு’ (Made in Mullaitivu) ஆகிய

திருமுறிகண்டியில், ‘அரியாத்தை பாரம்பரிய சைவ உணவகம்’ மற்றும் ‘மேட் இன் முல்லைத்தீவு’ ஆகிய இரு நிலையங்களும் கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது Read More »

நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற வீட்டுத்திட்டக் கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) கையளிக்கப்பட்டது. கல்லுண்டாயில் சுமார் 103 குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். தாழ்நிலப் பகுதியான இங்கு மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதுடன், நீண்ட நாட்களுக்கு நீர் தேங்கி நிற்கும் அவலமும் காணப்படுகின்றது. இதனால் மக்கள் பெரும்

நவாலி கிழக்கு – கல்லுண்டாய் குடியேற்ற கிராமத்தில் மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கான விசேட செயற்றிட்ட அறிக்கை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. Read More »

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது.

எமது மக்களின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும், உலக வங்கியின் முதற்கட்ட அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய செயற்றிட்டங்கள் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் ஜோஹன்னஸ் சுட் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை

உலக வங்கியின் தென்னாசியாவுக்கான உப தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அப் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை மணிக்கு நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில்

கீரிமலை தீர்த்தக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் புனிதமானவையாகும். அப் புனிதத்தன்மையைப் பேணிப் பாதுகாத்துக்கொண்டே அங்கு அபிவிருத்திகளைச் செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »