பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்
மாங்குளம் – மூன்றுமுறிப்பு பிரதான வீதியைக் கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பாலைப்பாணி மற்றும் கொம்புவைச்சகுளம் ஆகிய பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வியாழக்கிழமை (12.03.2026) ஆளுநர் அவர்கள் நேரில் களப் பயணத்தை மேற்கொண்டார். இந்தப் பயணத்தின்போது முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் அவர்களும் ஆளுநருடன் இணைந்திருந்தார். பாலைப்பாணி […]
