ஆளுநர்

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார்.

இலங்கையிலேயே முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்’ மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியன விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மாலை இரு கட்டங்களாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூலகாரணமாகத் […]

தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் விரைவில் ஆரம்பம் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்தார். Read More »

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

அரச சேவை ஒரு வரப்பிரசாதம். அர்ப்பணிப்புடன் செயலாற்றி முன்மாதிரியாகத் திகழுங்கள். வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை இன்னமும் மேம்படுத்தும் வகையில் உங்களின் சேவைகள் அமையவேண்டும் என புதிதாக நியமனம் பெற்ற விளையாட்டு உத்தியோகத்தர்களிடம் வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மக்களும் மேலதிகாரிகளும் தங்கள் பிரதேசங்களுக்கு இந்த அதிகாரிகள்தான் வேண்டும் எனக் கேட்கும் நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் (தரம் III) சேவைக்கு புதிதாகத் தெரிவு

வடக்கு மாகாண சபையின் விளையாட்டு உத்தியோகத்தர் 11 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்

வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இலங்கைக்கான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தூதுவர்களிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உள்ளூர் உற்பத்திகளை ஐரோப்பியச் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே அங்கு சந்தையை ஆக்கிரமித்துள்ள இத்தகைய போலி உற்பத்திகள் எமது மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் சவாலாக அமையும்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மற்றும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடினர் Read More »

இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் அவர்கள், இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்குவானூர்தி மூலம் பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் மற்றும் அவரது சிறப்புத் தூதுக்குழுவினர், அங்கிருந்து யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஜெட்விங் விடுதிக்குச்

இலங்கைக்கு உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள ‘ஸ்ரீ பஞ்ச் அக்னி அகாதாஷவின் தலைவரான சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ், யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். Read More »

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை.

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் மாங்குளம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் (2026 – 2036) உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வும், முதலாவது பங்குதாரர்கள் கூட்டமும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (24.02.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில்

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வடக்கின் மையமாக மாங்குளத்தைக் கட்டியெழுப்புவோம் – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை. Read More »

அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்துக்கு நடப்பு ஆண்டில் பல்வேறு மூலங்களிலிருந்தும் பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றினூடான மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று திங்கட்கிழமை (23.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதி, டித்வா பேரிடர்

அபிவிருத்தித் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான மனிதவளத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும் – வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல்கள் நாளை செவ்வாய்க்கிழமை (24.02.2026) முதல் மூன்று கட்டங்களாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் பிரசுரிக்கப்பட்ட வருடாந்த இடமாற்றத்துக்கான ‘சேவையின் தேவை கருதிய’ இடமாற்றப் பட்டியலில் காணப்பட்ட குறைபாடுகள் சீர்செய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஆசிரியர் சங்கங்களை உள்ளடக்கிய மேன்முறையீட்டுச் சபையூடாக மேன்முறையீட்டுச் செயற்பாடுகள்

2026ஆம் ஆண்டுக்கான வலயங்களுக்கிடையிலான வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான திருத்தப்பட்ட பட்டியல் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும் – வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் Read More »

ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் எனவும், அதற்காகக் கல்வியுடன் மாத்திரமன்றி ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி –

ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இவ்வாண்டு மேலும் விரிவாக்கி வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கடந்த ஆண்டு இறுதியில் தெல்லிப்பழை மானிடம் அறக்கட்டளையின் கோரிக்கைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட குளங்களைத் தூர்வாருவதற்கான செயற்றிட்டத்தை, இவ்வாண்டும் தொடர்ச்சியாகச் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். குளங்களைத் தூர்வாருவதன் ஊடாக வெள்ளப்பெருக்கைக்

கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டம், இவ்வாண்டும் செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின்

கல்லுண்டாய் பகுதி மக்கள் மழைக் காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »