‘போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கையின் தேசிய அனர்த்தமாக மாறியுள்ள நச்சுப் போதைப் பொருட்களிலிருந்து எமது சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் தேசியச் செயற்பாடு, மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ‘அகன்று செல்’ என்ற தொனிப்பொருளில், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற இம்மாபெரும் மக்கள் பேரணியில் மாண்புமிகு ஜனாதிபதி, அமைச்சர்களுடன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் […]
