“பின்தங்கிய கிராம மக்களுக்கான வாக்குறுதிகள் 2026 திட்டங்களில் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும்” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.
வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமங்களின் உண்மை நிலையை நேரில் கண்டு உணர்ந்து, அம்மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்துக்குத் […]
