முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் பிரதமர் ஹரிணி அவர்கள் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். – கௌரவ ஆளுநர் தெரிவிப்பு
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி வருகின்றார். இத்திட்டம் முழுமையடையும்போது முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காரைநகர், புதுவீதியில் அமைந்துள்ள அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25.01.2026) காலை 9 […]
