May 2026

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர்

சமூகமட்ட அமைப்புகள் மூத்தோரின் முதிர்ந்த அறிவுரைகளுடன் இளையோர்களால் வழிநடத்தப்படும்போது, அந்தச் சமூகத்தில் ஒழுக்கப் பிறழ்வுகள் மறைந்து அறநெறி தழைத்தோங்கும். இத்தகைய தன்னியக்கக் கண்காணிப்புப் பொறிமுறை எமது மாகாணத்தின் பல கிராமங்களில் நலிவடைந்து வருவது கவலையளிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கல்வியங்காடு ஞானபாஸ்கரோதய சங்கத்தின் 106ஆவது ஆண்டு நிறைவு விழாவும், கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சங்கத்தின் தலைவர் கி.கிருஸ்ணதாசன் தலைமையில் நேற்று (09.05.2026) சனிக்கிழமை மாலை […]

சமூக அமைப்புகள் கட்டுக்கோப்புடன் இயங்கினால் அந்தச் சமூகத்தவர்களாலேயே அச்சமூகம் கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் – கௌரவ ஆளுநர் Read More »

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர்

திடீர் திடீரென மாற்றமடையும் காலநிலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் துரிதமாகத் தகவமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூராட்சி மட்டத்தில் காலநிலை ஆளுகையை வலுப்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த உணர்வுள்ள உள்ளூர் ஆட்சி முன்னோடித் திட்டம் தொடர்பான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு, யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று (09.05.2026) சனிக்கிழமை ஆரம்பமானது. ஜனநாயக மற்றும் ஆளுகைக்கான நிறுவனம் (IDAG),

கடந்தகாலப் பேரிடர்களில் இருந்து கற்றுக்கொண்ட, அனுபவங்களைக் கொண்டு, எதிர் கால சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டிய தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது

இயந்திரமயமான வாழ்வில் சிக்கி ஓடிக்கொண்டு மன அழுத்தங்களையும் மனச்சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் இவ்வாறான இசை நாடக கூத்துக்கள் மிகப் பெரிய வலிநீக்கியாக – புத்துணர்வு ஊட்டுவதாக இருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பிரதேச செயலாளர் இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று

பளை பிரதேச செயலகமும், பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசை நாடக கலைஞர்களும் இணைந்து நடாத்திய ‘இசை நாடக கூத்துப் பெருவிழா’, பளை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது Read More »

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள்,

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். Read More »

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள்

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை Read More »

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் ‘Study In’ நிறுவனத்தின் புதிய கிளை இன்று (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது: ‘எமது மாகாண மக்களைப் பொறுத்தவரையில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாகும். கல்வியில் எப்போதும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »

எமது நிர்வாகக் கட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர்

எமது வட மாகாணத்தைப் பொறுத்தவரை, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம்’ என்பது வெறும் அரச திணைக்களங்களின் காகிதங்களில் உறங்கும் ஒரு சாதாரண கோப்புச் சார்ந்த விடயமல்ல. இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ஆறாத கண்ணீரோடும், பல தசாப்த கால ஏறுமாறான காத்திருப்போடும், விவரிக்க முடியாத வலியோடும் பின்னிப்பிணைந்த ஓர் அதிஉணர்வுபூர்வமான மனிதாபிமானப் பிரச்சினையாகும். அந்த உணர்வோடு அதை அணுகவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் நாடளாவிய ரீதியில்

எமது நிர்வாகக் கட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்துள்ளதா என நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

‘வர்ண இரவு’ விருது வழங்கலில் குழு விளையாட்டுக்களுக்காக வழங்கப்படும் பரிசுதொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

தேசிய மட்டத்தில் சாதிக்கும் வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ விருது வழங்கலின் போது வழங்கப்படும் பரிசுத் தொகையில், குழு விளையாட்டுக்களுக்கான தொகையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், பரிசுத் தொகை மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்

‘வர்ண இரவு’ விருது வழங்கலில் குழு விளையாட்டுக்களுக்காக வழங்கப்படும் பரிசுதொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் Read More »

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தனது தொடக்கவுரையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு

எமது மாகாணத்தில் ‘பின்தங்கிய கிராமம்’ என்ற ஒன்று இருக்கவே கூடாது. இவ் இலக்கினை அடைய பல தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் தேவை – கௌரவ ஆளுநர் Read More »

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, பணியாளர்களுடன் தொடர்புடைய நிர்வாக விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி விரைவுபடுத்துதல் தொடர்பில் ஆளுநரால் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன், பணிகளை மேலும்

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. Read More »