May 2026

யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்கு உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்காக உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட்கிழமை (25.05.2026) நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய சந்தோஷ; ஜா ஆகியோர் இந்த உயர்மட்டக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார […]

யாழ். திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை நிர்வகிப்பதற்கு உருவாக்கப்படவுள்ள நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபை தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநரின் பங்கேற்புடன் நடைபெற்றது. Read More »

யாழ். பல்கலைக்கழக வணிகத்துறை பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் பவளவிழாவில் ஆளுநர் வாழ்த்துரை வழங்கினார்

பேராசிரியர் க.தேவராஜா அவர்கள் உண்மையிலேயே மிகவும் பண்பான மற்றும் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர். சிறியவர்கள், பெரியவர்கள் என எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரையும் ஒரு சிறு சிரிப்போடு சமமாக மதிக்கும் அவரது குணமே அவரைச் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறையின் முதலாவது பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் 75ஆவது அகவையைக் குறிக்கும் பவளவிழா நிகழ்வு இன்று (24.05.2026) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30

யாழ். பல்கலைக்கழக வணிகத்துறை பேராசிரியர் க.தேவராஜா அவர்களின் பவளவிழாவில் ஆளுநர் வாழ்த்துரை வழங்கினார் Read More »

‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘தூய்மையான இலங்கை’ வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, ‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தின், யாழ்ப்பாண மாவட்டத்துக்கான கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று சனிக்கிழமை (23.05.2026) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இலங்கை இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ், அரச நிறுவனங்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் 256

‘அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ எனும் தொனிப்பொருளிலான கரையோரப் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். Read More »

எந்தவொரு மாணவனும் வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை ஏற்படக்கூடாது. அதனை உறுதிசெய்வது அதிகாரிகளின் தலையாய கடமையாகும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு மாணவனுக்கும் வறுமை ஒருபோதும் கல்விக்குத் தடையாக அமையக் கூடாது. வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை எந்தவொரு பிள்ளைக்கும் ஏற்படக்கூடாது. அதனை உறுதிசெய்வது அதிகாரிகளாகிய எமது தலையாய கடமையாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிளிநொச்சி, செல்வாநகர் வித்தியாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (22.05.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலை அதிபர் சி.மகேந்திரராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை

எந்தவொரு மாணவனும் வறுமையால் கல்வியைக் கைவிடும் நிலைமை ஏற்படக்கூடாது. அதனை உறுதிசெய்வது அதிகாரிகளின் தலையாய கடமையாகும். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு, கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியது

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். இதனை வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (22.05.2026) வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்சந்திப்பின்போது ஆளுநர் மேலும்

சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் நோர்வேத் தூதரகத்தின் பிரதிநிதிகள் குழு, கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியது Read More »

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையின் அதி உச்ச விளைச்சலாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் எதிர்பார்க்கப்படுகின்றது. – விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கையின் ஊடாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவே வடக்கு மாகாணத்தில் சிறுபோகமொன்றில் எதிர்பார்க்கப்படும் அதி உச்ச விளைச்சலாகும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தெரிவித்தார். மாகாண விவசாய அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சிறுபோக உத்தேச இலக்குகளின் பிரகாரம், இம்முறை மாகாணம் முழுவதும் மொத்தமாக 39,215 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஊடாக ஒட்டுமொத்த மாகாண ரீதியிலான நெல் உற்பத்தித்திறனானது

வடக்கு மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையின் அதி உச்ச விளைச்சலாக 1.74 இலட்சம் மெட்ரிக் தொன் எதிர்பார்க்கப்படுகின்றது. – விவசாய அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ Read More »

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் ஆகியோருக்கும் கௌரவ ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தால் (யு.என்.டி.பி.) எமது மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் உண்மையான தாக்கங்களையும் அதன் அடைவுகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்வது, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை இன்னும் வினைத்திறனான முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப் பெருமளவில் உதவும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் சுயாதீன மதிப்பீட்டகத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் டேவிட் சிலட்டரி மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் கெட்டலினா சலசார் ஆகியோருக்கும் வடக்கு மாகாண

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிராந்திய மதிப்பீட்டு ஆலோசகர் மற்றும் மதிப்பீட்டு ஆய்வாளர் ஆகியோருக்கும் கௌரவ ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கமைவாகத் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின்

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் அவர்களும், வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.கிருஸ்ணேந்திரன் அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட இந்த இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்ட இரு அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

எந்தத் தடைகளையும் தாண்டும் உறுதியும் மனத்திடமும் உள்ள இந்தச் சாதனைப் பெண்களால், எதிர்காலத்தில் வறுமையில் முதலிடத்திலிருக்கும் முல்லைத்தீவு மாவட்டம் வறுமையற்ற இறுதி நிலைக்குச் செல்லும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (19.05.2026) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச்

பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. Read More »