April 2026

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நியமனங்களைப் பெற்றுவிட்டு வேலை எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்துவிட்டும் போகலாம்; அல்லது, எமது மக்களுக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் உழைக்கலாம். தெரிவு உங்களுடையதுதான். ஒரு கதிரை உங்களுக்குத் தரப்படுகின்றது. அதை எவ்வாறு அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பதில்தான் உங்களின் சிறப்பு அடங்கியுள்ளது. எங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உங்களின் உண்மையான வெற்றியும் தங்கியிருக்கின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழான 33 விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் 20 […]

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்வடையச் செய்வதில்தான் உத்தியோகத்தர்களின் உண்மையான வெற்றி தங்கியிருக்கின்றது – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். Read More »

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னிறுத்தி, கொழும்பில் உள்ள நிதியளிக்கும் நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் பல்வகை அமைப்புக்களின் பிரதிநிதிகளை

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் இந்த உன்னதமான உயிர்த்த ஞாயிறு தினத்தில், வடக்கு மாகாணத்தில் வாழும் அனைத்துக் கிறிஸ்தவ மக்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறுதினச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மரணத்தின் இருளை வென்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தமையானது, துன்பத்தின் மீது நம்பிக்கையும், வெறுப்பின் மீது அன்பும், இருளின் மீது ஒளியும் எப்போதும் வெற்றிபெறும் என்ற நித்திய உண்மையை

கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தி Read More »

நாம் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் – கௌரவ ஆளுநர்.

யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம். சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இலங்கைக்கும்

நாம் பாரம்பரிய உணவுகளின் பக்கம் மீண்டும் கவனம் செலுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் – கௌரவ ஆளுநர். Read More »

யாழ்ப்பாண மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச்

யாழ்ப்பாண மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது – உலக வங்கிப் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ‘ரிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (03.04.2026) தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய உலக

வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது – உலக வங்கிப் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர். Read More »

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (02.04.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க அவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மிகச் சிறந்த சாதனையுடன்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் எரிபொருள் மற்றும் மின்சக்தி நெருக்கடி நிலைமையைக் கருத்திற் கொண்டு, அவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 11.30 மணியளவில் பிரதம செயலாளர் செயலகத்தில் நடைபெற்றது. வட மாகாண பிரதம செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் ஆகியவற்றின் கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதிமேதகு

எரிபொருள் மற்றும் மின்சக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்த விசேட நடவடிக்கைகள்: வட மாகாண பிரதம செயலாளர் தலைமையில் தீர்மானம் Read More »

பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடப் போவதில்லை என அவரிடமிருந்து எழுத்துமூல உறுதிமொழியும் பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த தனியார் பேருந்தில் பயணித்த பயணியொருவரிடம் நடத்துநரால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட

பயணியொருவரிடம் மேலதிக கட்டணம் அறவிட்ட நடத்துநருக்கு 2,500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது Read More »

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ”Team Bison” அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride – Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். ‘போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன்

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ மற்றும் ‘ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி’ ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியக ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது Read More »