April 2026

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் குளப் புனரமைப்புப் பணிகளின் போது இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிடுவதற்கு ஏதுவாக பொது மக்கள் பாதுகாப்பு கௌரவ அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தொடர் நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29.04.2026) புதன்கிழமை காலை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. […]

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவு

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், ஓய்வுபெற்ற நீதிபதியின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் கையாள்வதைத் தடுக்கும் நோக்கில், சர்ச்சைக்குரிய வேலைத்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்துமாறும், சட்டவிரோத வரி அறவீடுகளைக் கைவிடுமாறும் ஆளுநர் விடுத்துள்ள அறிவுறுத்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி ஆணையாளரால் வவுனியா மாநகர சபை ஆணையாளருக்குக் பணிப்புரை

வவுனியா மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவு Read More »

மகளிர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கல் மற்றும் விநியோகம், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ

மகளிர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

வழங்கப்பட்ட அரச நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அல்லாமல், மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

மாபியாக்களுடன் ‘டீல்’ வைத்திருந்தால், மோசடியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால், செல்வாக்குள்ள சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்குச் செவிசாய்த்தால் அல்லது அவர்கள் கோருபவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்களை வழங்கினால் என்னை ஒரு நல்ல ஆளுநர் என்று பலரும் புகழ்வார்கள். ஆனால், அதைவிடுத்து சரியானது எதுவோ அதைச் செய்தால் தூற்றுவார்கள். இப்படியானதொரு சவாலான சூழலுக்குள்தான் நீங்களும் பணியாற்றப் போகின்றீர்கள். யார் என்ன சொன்னாலும், நீங்கள் மக்கள் நலன் சார்ந்த சரியான விடயங்களையே செய்ய வேண்டும். நேர்மையாகச் செயற்படும் உங்களுக்கு நாங்கள் எப்போதும் துணை

வழங்கப்பட்ட அரச நியமனங்கள் வெறுமனே ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அல்லாமல், மக்களுக்குச் சேவையாற்றுவதற்காகவே வழங்கப்படுகின்றன. – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் Read More »

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது

வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விரிவாகத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநர் அவர்களுக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும்

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது Read More »

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – கௌரவ ஆளுநர்

இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் ‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த ஆய்வு மற்றும் திட்டமிடல் குறித்து ஜப்பானின் ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் மற்றும் இலங்கையின் கன்சல்டிங் இன்ஜினியர்ஸ்

புதுப்பிக்க சக்தி ஊடான திட்டங்கள் ‘சூழல் நேயமான’ திட்டங்கள் என்பதால் அவை அவசியமானவை – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய கௌரவ

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஆலோசகருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம் பெற்றது

நெடுந்தீவு பிரதேசத்துக்குச் சென்று பணியாற்றும் அலுவலர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆபத்துக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவின் ஆலோசகரும், முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரியுமான அசோக பீரிஸ் மற்றும் வடக்குw மாகாண கௌரவ ஆளுநருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (24.04.2026) வெள்ளிக்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. நெடுந்தீவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஆலோசகருக்கும் கௌரவ ஆளுநருக்கு இடையே சந்திப்பு இடம் பெற்றது Read More »

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச் சங்கங்களாலேயே முடியும். எமது இந்த மக்கள் நல முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் செயற்படும் மாபியாக்களைத் தாண்டி, இத்திட்டத்தை நாம் நிச்சயம் வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக விவசாயத் துறையில் நவீன மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில், துணுக்காய் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும்

மணல் மாபியாவைப் போலவே நெல் சந்தையிலும் மாபியாக்கள் இயங்கி வருகின்றனர். இந்தச் சுரண்டலைத் தடுக்க இடைத்தரகர்களற்ற ஒரு பொறிமுறை அவசியமாகும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இலங்கையில் கண் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளில் வட மாகாணமே முன்னோடியாகத் திகழ்கின்றது. அந்த வரிசையில் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகும் ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டம்’ (Rural Life of Light), முழு நாட்டுக்கும் ஒரு புதிய வழிகாட்டியாக அமையப்போகின்றது என வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வட மாகாண மக்களின் கண் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘கிராமிய ஒளி வாழ்வுத்திட்டத்தின்’ அங்குரார்ப்பண நிகழ்வும், சுகாதார அதிகாரிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறையும் இன்று

வடக்கு மாகாணத்தில் தான் கண் சத்திர சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் ‘பூச்சிய’ நிலையில் உள்ளது. ஏனைய மாகாண மக்கள் கூட இங்கு வந்து சத்திர சிகிச்சை மேற்கொண்டு செல்கின்றனர். – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார். Read More »