ஆளுநர்

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.

தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் […]

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை. Read More »

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர், கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புக்களை மறுசீரமைப்பதற்கு, மாகாண சபையின் வருடாந்த வரவு – செலவுத் திட்ட நிதிக்கு மேலதிகமாக, மத்திய அரசாங்கத்தால் விசேட நிதி ஒதுக்கப்படவுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர் ஒலிவியர் பிராஸ் (Olivier Praz) தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் துணைத் தூதுவர், கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் (Sri Lanka – Canada Business Council) ஒருங்கிணைப்பில், இவ்வாண்டு இரண்டாவது தடவையாக முன்னெடுக்கப்படவுள்ள தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் நிகழ்வு தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (16.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், விருது வழங்கல் நிகழ்வைச் சிறப்பான முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இவ்விருது வழங்கல் நிகழ்வானது வடக்கு மற்றும்

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், தொழில் முனைவோருக்கான விருது வழங்கல் தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை செவ்வாய்க்கிழமை (17.02.2026) ஆரம்பமாகவுள்ள நிலையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் எமது அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலப் பின்னடைவுகளைத் தகர்த்தெறிந்து, இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்வி வரலாற்றில் நீங்கள் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கௌரவ ஆளுநர் வாழ்த்துச் செய்தி Read More »

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்திட்டமானது, வடமாகாணத்தின் மனித வள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. – ஆளுநர் புகழாரம்

டிஜிட்டல் மயமாக்கல், போதைப்பொருள் அற்ற தேசத்தை உருவாக்குதல் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசாங்கம் கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்புக்கு உயர் திறனும் தகுதியும் கொண்ட அரச சேவை அவசியமாகும். இத்தகைய தேசிய முன்னுரிமைகளைத் திறம்பட ஆதரிப்பதற்குத் தேவையான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நெறிமுறைத் தரங்களுடன் எமது அதிகாரிகளைத் தயார்படுத்துவதில் ஐடெக் (ITEC) புலமைப்பரிசில் செயற்திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியத் தொழில்நுட்ப மற்றும்

இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு செயற்திட்டமானது, வடமாகாணத்தின் மனித வள மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. – ஆளுநர் புகழாரம் Read More »

நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம்.

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பௌதீக, மனிதவளத் தேவைப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் எடுத்துரைத்துத் தீர்வுகளைப் காண்பதற்கான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (14.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ம.ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ ஜெ.றஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில் கல்வி,

நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம். Read More »

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை

2026ஆம் ஆண்டு அபிவிருத்திக்குரிய ஆண்டு. எனவே, அதிகாரிகள் ‘அபிவிருத்தி நிர்வாகத்தை’ முன்னெடுக்கத் தயாராக வேண்டும். சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், இன்று

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை Read More »

விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (13.02.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. மாகாண சபைக்குரிய மட்டுப்படுத்தப்பட்ட நிதியைக் கடந்து, மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களிடமிருந்து எவ்வகையில் மேலதிக நிதியையும், உதவிகளையும் பெற்றுக்கொள்வது என்பது குறித்தும், மாகாணத் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் துறைசார் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

விவசாயம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் நன்னீர் மீன்பிடித் துறைகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் நோக்கில், கௌரவ ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

‘மக்களுக்காகத்தான் உங்கள் பணியே தவிர, உங்கள் பணிக்காக மக்கள் இல்லை’ – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

மக்களுக்கான சேவையை நீங்கள் சிறப்பாகச் செய்தால் அவர்கள் மனதில் நீங்கள் நிச்சயம் இடம்பிடிப்பீர்கள். அவர்கள்தான் உங்களை மதிப்பிடுபவர்கள் – கண்காணிப்பவர்கள். உங்களிடம் வந்தால் சேவையை திருப்தியுடன் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மக்களிடம் உருவாகும் வகையில் உங்கள் சேவை அமையும் என நான் நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 114 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும்

‘மக்களுக்காகத்தான் உங்கள் பணியே தவிர, உங்கள் பணிக்காக மக்கள் இல்லை’ – முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் நியமன கடிதம் வழங்கும் நிகழ்வில் கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த வருடம் 2,726 மில்லியன் ரூபா செலவில் 1,363 புதிய வீடுகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் இவ்வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் கௌரவ அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »