யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன. மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னிறுத்தி, கொழும்பில் உள்ள நிதியளிக்கும் நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் பல்வகை அமைப்புக்களின் பிரதிநிதிகளை […]
