“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை.
வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (25.02.2026) மாலை கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்புதிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், இது வெறுமனே ஒரு இணையத்தளத்தையோ அல்லது மென்பொருளையோ […]
