ஆளுநர்

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார். 1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்று (14.06.2026) ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் […]

பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தயாராகவுள்ளது. எனவே, அதற்கான கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது Read More »

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தொழிற்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம் மற்றும் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (12.06.2026) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆளுநர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தின் தங்குமிட விடுதி கட்டுமான வேலைகளை இந்த ஆண்டு இறுதிக்குள்

இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் அவசர உட்கட்டமைப்பு அபிவிருத்தி, நிர்வாக ஒழுங்குபடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. மாகாணத்திலுள்ள ஆதார மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், சத்திரசிகிச்சைக் கூடங்களை நவீனமயப்படுத்தல், டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நோயாளர் தரவு மையங்களை நிறுவுதல் மற்றும் உட்கட்டமைப்புத் திருத்த வேலைகளுக்காக ஆசிய

சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

யாழ் மாவட்டத்தில், குளங்களைத் தூர்வாருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரும் செயற்றிட்டத்தை, இந்த ஆண்டு எதிர்வரும் ஜூலை மாதத்தில் மீள ஆரம்பிப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குளங்களைத் தூர்வாருவது தொடர்பான இந்த விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த ஆண்டு கந்தரோடைக் குளத்தில் முன்னெடுக்கப்பட்ட தூர்வாரும் செயற்றிட்டத்தின் மூலம் ஏற்பட்ட சாதகமான விளைவுகள் குறித்தும், அச்செயற்றிட்டத்தை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட

யாழ் மாவட்டத்தில், குளங்களைத் தூர்வாருவது தொடர்பான விசேட கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08.06.2026) திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் அவர்கள் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றது. Read More »

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்

கடந்த ஆண்டு ஏற்பட்ட ‘டித்வா’ பேரிடரின்போது மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. துரிதகதியில் இடம்பெற்று வரும் இந்தச் சீரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையிலான விசேட குழுவினர் இன்று (05.06.2026) வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். ‘டித்வா’ பேரிடரின் கோரத்தாண்டவத்தால், பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதியின் ஒரு பகுதியில் காணப்பட்ட

‘டித்வா’ பேரிடரின் போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பூவரசன்குளம் – செட்டிக்குளம் பிரதான வீதி புனரமைப்புப் பணிகளை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார் Read More »

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம்

வவுனியா மாவட்டத்தின் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களான குருக்கள்புதுக்குளம், கந்தசாமிநகர், கப்பாச்சி, வீரபுரம் மற்றும் நித்தியநகர் உள்ளிட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (05.06.2026) நேரடியாக பயணம் செய்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்ததுடன், பல நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வழங்கினார். இந்த விசேட களப் பயணத்தில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கௌரவ பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, கௌரவ நாடாளுமன்ற

செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களுக்கு கௌரவ ஆளுநர் களவிஜயம் Read More »

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண சபையின் வருவாயை அதிகரிப்பதன் ஊடாகவே எமது மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேலும் விரிவாக்கிக் கொள்ள முடியும் எனவும், எனவே வருவாய் ஈட்டக்கூடிய அனைத்துத் திணைக்களங்களும் தமக்கான இலக்குகளை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் வருவாய் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »