ஆளுநர்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நாம் தற்போது ஆண்டின் அரைப்பகுதிக்கு வந்துள்ளோம். எனவே, எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் […]

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read More »

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்களை உருவாக்கி முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அனுமதியளித்துள்ளது. வடக்கு மாகாணத்துக்கான ஆளணி வெற்றிடங்கள் மற்றும் தேவைகள் குறித்து கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளையடுத்து, அது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் பயனாக, சுமார் 13 ஆண்டுகளின் பின்னர் முகாமைத்துவ

கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சிகள் மற்றும் வலியுறுத்தல்களின் பலனாக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனைக்குப் புதிதாக 58 ஆளணி இடங்கள் உருவாக்கம் Read More »

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன.

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18.06.2026) வியாழக்கிழமை நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் குறித்த மருத்துவமனைகளின் நோயாளர் நலன்புரிச் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், அவற்றைத் தீர்ப்பதற்கான சாதகமான தீர்மானங்களும் எட்டப்பட்டன. மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மேம்பாடு:

மானிப்பாய் பிரதேச மருத்துவமனை மற்றும் மல்லாவி ஆதார மருத்துவமனை ஆகியவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றன. Read More »

லன்டேன்’ (LANTERN) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்டேன் (LANTERN – Land and Trust-Building Engagement) செயற்றிட்டம் வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வரப்பிரசாதம் எனவும் இந்தத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை விடுத்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாகக் காணப்படும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான ‘லன்டேன்’ செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

லன்டேன்’ (LANTERN) செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. Read More »

மல்லாவி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.

இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம்;, அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work – More problem) என்ற எண்ணம் உருவாகி வருகின்றது. இதனால், எமது சமூகத்துக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உரியவாறு பயன்படுத்திக் கொள்ளும் நிலை அருகி வருகின்றது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியின் மாணவர்களின் அழகியல்

மல்லாவி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட ‘ஜெயரட்ணம் நுண்கலையகம்’ கௌரவ ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. Read More »

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. மேலும் கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களங்களின் ஊடாக பல்வேறு நிதி மூலங்களில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களும் விரிவாக மீளாய்வு

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஆண்டிறுதியில் எதிர்பார்க்கப்படும் கனமழைக்கு முன்னதாக, மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதமாக நிறைவு செய்யுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நன்னீர் மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் இன்று (17.06.2026) புதன்கிழமை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு விசேட

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் துறைசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சேவைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு

சுகாதார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. Read More »

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிப அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (15.06.2026) திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய கௌரவ ஆளுநர், நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். எனவே, திட்டங்கள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட வேண்டும். கொள்வனவு நடவடிக்கைகளை

நாம் தற்போது ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்துள்ளோம். அபிவிருத்தி திட்ட வேலைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், இன்று திங்கட் கிழமை (15.06.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற

யாழ். மாவட்டச் செயலக முன்றலில் காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், கௌரவ ஆளுநரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தனர். Read More »