ஆளுநர்

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை காலை நடைபெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, கௌரவ […]

மன்னார் மக்களுக்கான நவீன அவசர மருத்துவ சேவை: 600 மில்லியன் ரூபா புதிய கட்டடத்துக்கு அடிக்கல் Read More »

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

வவுனியா மாவட்டத்தின் வவுனியா பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அலியாமருதமடுக் குளம் தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் பல்வேறு முறைப்பாடுகளை ஆராய்ந்து, அவற்றுக்கு ஒழுங்குமுறையானதும் நிரந்தரமானதுமான தீர்வை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலியாமருதமடுக் குளம் தொடர்பில் சிலரால் தொடர்ச்சியாக பல்வேறு அரச திணைக்களங்களுக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், பிரச்சினையின் உண்மை நிலையை நேரில் ஆராய்ந்து, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி தீர்வு காண

அலியாமருதமடுக் குளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை – ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார்

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி மற்றும் பாலம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோர் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, நெடுங்கேணி–கூளாங்குளம் வீதியின் 1.86 கிலோமீற்றர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் மற்றும் பிரமணாலங்குளம்–பரப்புக்கடந்தான் வீதியின் 5.55 கிலோமீற்றர் பகுதியில் 200 மீற்றர் நீளமான கொங்கிறீட் வீதியும் ஆற்றுச்சருக்கையும் அமைக்கும் பணிகள்

வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆளுநர் நேரில் பார்வையிட்டார் Read More »

மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்துச் சிரமத்துக்கு தீர்வு – கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் புதிய ஆற்றுச்சருக்கை திறந்து வைப்பு

ஒவ்வொரு மழைக்காலத்திலும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் அதற்கு தீர்வு காணும் வகையில், வவுனியா மாவட்டத்தின் கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆற்றுச்சருக்கை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ஆகியோரால் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக மக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்த இப்பகுதியில், மழைக்காலங்களில் ஏற்படும் நீர்ப்பெருக்கு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்தனர். இதனை கருத்திற்கொண்டு, மக்களின் போக்குவரத்தை

மழைக்காலங்களில் மக்களின் போக்குவரத்துச் சிரமத்துக்கு தீர்வு – கந்தபுரம்–ராசேந்திரன்குளம் வீதியில் புதிய ஆற்றுச்சருக்கை திறந்து வைப்பு Read More »

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரில் களமிறங்கிய ஆளுநர்

வவுனியா மாவட்டத்தின் கள்ளிக்குளம் பிரதேச மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் பார்வையிட்டு, அவற்றுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வன்னி மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (15.09.2026) செவ்வாய்க்கிழமை கள்ளிக்குளம் பிரதேசத்துக்கு நேரில் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இதன்போது, சுமார் 40 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத

கள்ளிக்குளம் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரில் களமிறங்கிய ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுக்கான தற்போதைய நிலைமை, முதலீடுகளை முன்னெடுப்பதில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்நோக்கும் இடையூறுகள் மற்றும் தாமதங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியக் குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தனர். இலங்கையின் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக நாட்டுக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியக் குழுவினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (12.09.2026)

வடக்கு மாகாணத்தில் முதலீட்டுச் சூழல், சமூக நலன்புரி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஆளுநருடன் சர்வதேச நாணய நிதியக் குழு கலந்துரையாடல் Read More »

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன

வடக்கு மாகாணத்திலுள்ள சில பிரதேச சபைகளை நகர சபைகளாகத் தரம் உயர்த்துவது அல்லது இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியுள்ள சில பிரதேச சபைகளைப் பிரித்து புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது தொடர்பில், அவற்றை எதிர்காலத்தில் வினைத்திறனுடன் நிர்வகிப்பதற்குத் தேவையான நிதி வல்லமை உறுதியாகக் காணப்படுமாயின், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்குமாறு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி

“உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துவதும், புதிய மன்றங்களை உருவாக்குவதும் நிதி வல்லமையை உறுதி செய்த பின்னரே பரிசீலிக்கப்படும்” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன Read More »

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன.

வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு தேவையான ஆளணி மற்றும் நிதி வளங்களை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். குறிப்பாக, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் உத்தியோகத்தர்களை குறுகிய காலத்துக்கு குறித்த மாவட்டங்களுக்கு இணைத்து சேவையாற்றச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் இவ்வாண்டைவிட கூடுதலான நிதி ஒதுக்கப்படும் என

முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை; வடக்கு மாகாணத்துக்கு அடுத்த ஆண்டும் கூடுதல் நிதி ஒதுக்கீடு” – அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன. Read More »

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

கல்வி அறிவை மட்டும் வழங்குவதால் ஒரு மனிதன் முழுமையடைவதில்லை, நல்ல குணம், தலைமைத்துவப் பண்பு மற்றும் பிறருக்காகப் பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் மாணவர்கள் வளர வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா – 2026 இன் முதலாம் நாள் நிகழ்வு இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வட்டு

மாணவர்கள் கல்வி அறிவுடன் மட்டும் நின்று விடாது தலைமைத்துவ பண்பு மற்றும் பிறருக்காக பொறுப்பேற்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் Read More »

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் கலந்து கொண்டார். இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக க. ஏகாந்தன் நியமனம் Read More »