ஆளுநர்

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025

போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து […]

சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் – 2025 Read More »

கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார்

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் 16.04.2025 அன்று புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளைப் பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் அந்த அமைப்பு முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார். இதன்போது கோப்பாய் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ அவர்களும் இணைந்திருந்தார்.

கிறீன் லேயர் அமைப்பின் நாற்றுப் பண்ணையை வடக்கு மாகாண ஆளுநர் பார்வையிட்டார் Read More »

கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கம் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில் 16.04.2025

கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு Read More »

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025

இன்றைய பிள்ளைகள் பாடசாலை முடிந்தவுடன் ஒன்றில் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்கின்றனர். இல்லையேல் அலைபேசியுடன் வீட்டில் மூழ்கிக் கிடக்கின்றனர். விளையாட்டு மைதானத்தை எட்டிப்பார்ப்பது அருகி வருகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேதனை வெளியிட்டார். வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025, இரண்டாம் நாள் நிகழ்வு வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழக வடபுல மைதானத்தில் 15.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம

வட்டுக்கோட்டை விளையாட்டுக் கழகமும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் புதுவருட விளையாட்டு விழா – 2025 Read More »

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 15.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. வெளிக்கள நிலையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர் கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கிய அந்த நிலையத்தை நெறிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இடையில் ஏற்பட்ட குழப்பங்களைச் சீர் செய்து அந்த நிலையம் தொடர்ந்து பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் கருத்தை ஆமோதித்ததுடன்,

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் Read More »

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 15.04.2025 அன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும். ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. Read More »

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது.

தொண்டு அமைப்புக்கள் பல செயற்பட்டிருந்தாலும் அவை காலப்போக்கில் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதால் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்னமும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புகழாரம் சூட்டினார். இளவாலை மக்கள் ஒன்றிய அமைப்பின் பிரதான நிதிப் பங்களிப்புடனும், அமரர் மருத்துவர் மோகன் அவர்களது நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களினது நிதிப்பங்களிப்புடனும் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இன்று

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட ‘மருத்துவர் மோகன் ஞாபகார்த்த உள்ளக விளையாட்டரங்கம்’ இளவாலையில் திறந்து வைக்கப்பட்டது. Read More »

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகளின் 3ம் நாள் காலை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

முன்னைய காலங்களில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பித்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலைமைதான் வரப்போகின்றதோ என்று பல அதிபர்கள் எனக்குச் சொல்கின்றார்கள். சில பாடங்களுக்கு எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் போகப்போகின்றது. மாணவர்களை இப்போதே சரியான துறைகளைத் தெரிவு செய்வதற்குரிய வழிகாட்டல்களை வழங்காவிடின் பாரதூரமான விளைவுகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரயின் 150ஆவது ஆண்டு நிகழ்வுகளின் 3ம் நாள் காலை நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து (01.05.2025) அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்றும், அவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், எனவே அலுவலர்களுக்கான போக்குவரத்து சேவையில் பயணிப்பவர்கள் இவ்விடயம் தொடர்பில் கருத்திற்கொள்வதன் மூலம் தமக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்த்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், வடமாகாண கௌரவ

வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை. Read More »