சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்புக்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ச்சியான ஊக்குவிக்கும், கண்காணிப்பும் இருக்கவேண்டும். அதன் ஊடாக தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தொழில் முயற்சியாண்மை, ஆய்வு மற்றும் முன்னெடுப்புகளுக்கான ‘கேட்’ நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வியாபார மேம்பாட்டு இணைப்பு அலகின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வட […]
