யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் அவர்கள் கோரிக்கை
யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12/07/2024) நடைபெற்றது. கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக […]
