Balasingam Kajenderan

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நேற்று (12/07/2024) நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. அந்தவகையில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், மிக நீண்டகாலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர  நியமனங்களை பெற்றுக்கொடுக்க பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன. எங்களின் […]

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க முதன்முதலாக ஆதரவு வழங்கியவர் வடக்கு மாகாண ஆளுநரே. – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு Read More »

யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் அவர்கள் கோரிக்கை

யாழ். மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12/07/2024) நடைபெற்றது. கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களின் விசேட பங்குபற்றுதலுடன், இணைத் தலைவர்களான கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், குறிப்பாக அலுவலக உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் அதிகரித்துள்ளதால் “உரித்து” தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக

யாழ் மாவட்டத்தில் காணப்படும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தித்து தருமாறு பிரதமரிடம், ஆளுநர் அவர்கள் கோரிக்கை Read More »

சிறுவர் இல்லங்கள் தொடர்பாக ஆளுநர் செயலகத்தின் ஊடக அறிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு கௌரவ ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.  இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில்  கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய

சிறுவர் இல்லங்கள் தொடர்பாக ஆளுநர் செயலகத்தின் ஊடக அறிக்கை Read More »

மக்களின் தேவைகளைபூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். – பருத்தித்துறை தொண்டைமானாறு சித்தமத்திய மருந்தக திறப்பு விழாவில் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டைமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் 09/07/2024 அன்று  திறந்து வைக்கப்பட்டது. 60 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 12 பரப்புக் காணி அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய கௌரவ ஆளுநர் அவர்கள், “மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட ஆயுர்வேத சித்த மருந்தகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனூடாக இப்பகுதி

மக்களின் தேவைகளைபூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர். – பருத்தித்துறை தொண்டைமானாறு சித்தமத்திய மருந்தக திறப்பு விழாவில் கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, கௌரவ ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் 08/07/2024 அன்று  ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு  மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரால், கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் Read More »

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம்

இலங்கையிலுள்ள 9 மகாணங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் இயலளவை  மேம்படுத்தும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக மாகாணங்களுக்கு இடையே புதிய விடயங்களை அறிந்து கொள்ளும் கள விஜயங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணத்தை சேர்ந்த பல அலுவலகங்களும் இவ்வாறான விஜயங்களை மேற்கொண்டு வருகின்றது. வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அலுவலகங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் இயலளவை அதிகரிப்பதற்கான தேவை காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனென்றால் நிறுவனங்களின் வினைத்திறனான செயற்பாடுகள் தொடர்பில் ஆண்டுகள் தோறும் மேற்கொள்ளப்படும் அரச கணக்குகள் குழுவின் மதிப்பீடு, உற்பத்தித்திறன்

மாகாணங்களுக்கு இடையேயான உத்தியோகத்தர்களின் இயலளவை மேம்படுத்தும் செயற்திட்டம் Read More »

அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்  அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணம், தந்தை செல்வா அரங்கில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு இன்று அஞ்சலி செலுத்தியதுடன், அவரின் உருவப்படத்திற்கும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். அமரர் இரா.சம்பந்தன் அவர்களின் உறவினருடன், கௌரவ ஆளுநர் அவர்கள் தனது அனுதாபங்களையும்   பகிர்ந்துக்கொண்டார்.

அமரர் இரா. சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு, வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி Read More »

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில், கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. அபயம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறுவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதியநியமனங்கள் இன்று வழங்கி வைப்பு Read More »

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார்

மன்னார் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று நடைபெற்றது. மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100 வருடங்கள் நிறைவடைவதையொட்டி இன்று மீண்டும் அன்னைக்கு முடி  சூட்டப்பட்டது. கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின்  தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து மருதமடு அன்னையின் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது. இன்றைய திருவிழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் கலந்துக் கொண்டார். நாட்டின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும், இலட்சக்கணக்கான பக்தர்களும் மடு

மன்னார் மருதமடு அன்னையின் வருடாந்த ஆடித் திருவிழாவில்வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் கலந்துக்கொண்டார் Read More »