‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது
உள்ளூர் கைப்பணிக் கலைஞர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலுடன் தேசிய அருங்கலைகள் பேரவையால் வருடாந்தம் நடத்தப்படும் ‘சில்ப அபிமானி’ – ஜனாதிபதி விருது தேசிய கைப்பணிப் போட்டியில் வெற்றிபெற்ற வடக்கு மாகாணக் கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்திலிருந்து 119 ஆக்கங்கள் தேசிய மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் 29 […]
