Balasingam Kajenderan

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 22.11.2024 இடம்பெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு ஆளுநர், எதிர்வரும் நாள்களில் தாழமுக்கம் ஒன்று வங்கக் கடலில் உருவாகலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை […]

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில் இருப்பதாக அறிவிப்பு Read More »

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் பாராட்டு விழா வலம்புரி ஹோட்டலில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை (19.11.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, கட்டளைத்தளபதிக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன் நினைவுச் சின்னத்தையும் கையளித்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த காலங்களில் பணியாற்றிய பலர் அதன் பின்னர்

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் பாராட்டு விழாவில் வடக்கு ஆளுநர் பங்கேற்பு Read More »

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு

அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண

மக்களை அலைக்கழிக்காமல் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு Read More »

இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை கல்வியால்தான் அபிவிருத்தி செய்ய முடியும். அதைக் கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றவேண்டும். எந்தவொரு விடயத்திலும் கண்காணிப்பும், தொடர் நடவடிக்கையும் இருந்தால் மாத்திரமே அதில் வெற்றி சாத்தியம். அதைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் செயற்பட வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை 19.11.2024 அன்று வடக்கு

இலக்கை நிர்ணயித்து செயற்பட அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் பணிப்பு Read More »

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் 20.11.2024 அன்று கையளித்தார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போதே அவர் இந்தக்

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்கு 12 மில்லியன் ரூபா நிதி உதவி சீனத்தூதுவரால் வடக்கு ஆளுநரிடம் கையளிப்பு Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க சந்தித்தார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க  18/11/2024 அன்று ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். சந்திப்பின் போது யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு.நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க சந்தித்தார் Read More »

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல்

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள்  கப்பல் சேவை தொடர்பாக  காணப்படுகின்ற முறைப்பாடுகள் மற்றும் திருப்தியின்மை தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், துறைமுக அதிகாரசபையின் பிரதிப்பிரதம செயற்திட்ட முகாமையாளர், காங்கேசன்துறைத் துறைமுக பொறுப்பு அதிகாரி, உதவி பாதுகாப்பு உத்தியோகத்தர், வட மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், அதிகாரிகள்

காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பான கலந்துரையாடல் Read More »

ஜூடோ பயிற்சி முகாம் மற்றும் தரப்படுத்தல் 

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் 2024 அக்டோபர் 25,26,27 ஆம் திகதிகளில் மாகாண மட்ட ஜுடோ பயிற்சி முகாம் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கான தரப்படுத்தல் இடம்பெற்றது. இந் நிகழ்வு இரண்டு நாட்கள் பயிற்சி செயலமர்வாகவும் இறுதி நாளன்று தரப்படுத்தல் செய்முறைப் பயிற்சியும் நடைபெற்றது. இப் பயிற்சி நிகழ்வுக்கு வடமாகாணத்தைச் சேர்ந்த 214 வீர வீராங்கனைகள் பங்குபற்றியமை சிறப்பம்சம் ஆகும்.அத்துடன் வளவாளராக தேசிய ஜுடோ சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து பயிற்சியினை

ஜூடோ பயிற்சி முகாம் மற்றும் தரப்படுத்தல்  Read More »

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியாக நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களும் இந்திய துணைத்தூதர் ஶ்ரீமான் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் பதில் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், யாழ் மாநகர சபை ஆணையாளர், கலைத்துறை சார்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஆகியோர் 05.11.2024 அன்று  ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டனர். இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்டு உள்ள யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் கலாசார நிகழ்வுகளை

யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தினை பராமரித்தல் மற்றும் தொடர்ச்சியாக நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் Read More »

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தனர்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (04.11.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களை சந்தித்தனர். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பாக விபரங்கள் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது . தொடர்ந்து வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும். தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் தொடர்பாகவும் வினவப்பட்டது. மீன்பிடி, விவசாயம்,

சிங்கப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் திரு.பேட்ரிக் டேனியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை சந்தித்தனர். Read More »