Balasingam Kajenderan

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும்

போர் முடிந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும், தேசிய உற்பத்திக்கு குறைந்தளவு பங்களிப்புச் செய்கின்ற நிலைமையிலேயே எமது மாகாணம் இருக்கின்றது. அதை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு  புதன்கிழமை (12.12.2024) காலை, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை கலாசார மண்டபத்தில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் […]

எமது மாகாணத்திலுள்ள எத்தனை விவசாயிகளை அடுத்த ஆண்டு உயர்ந்த நிலைக்கு கொண்டுவரமுடியம் என்ற இலக்கை நிர்ணயித்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாகாணம் உயர்ந்த நிலைக்குச் செல்லும் Read More »

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட கௌரவ ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில்  வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றது. பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ்,

மனித உரிமைகள் தின நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் Read More »

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத் தினம் (ITEC Day) யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கலாசார நிலையத்தில் 11.12.2024 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது, மகாகவி சுப்பிரமணியம் பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் உட்பட அதிதிகள் மலர்மாலை அணிவித்தனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், எங்கள் சேவைகள் மெருகூட்டப்படுவதற்கு பயிற்சிகள் முக்கியம் என்று குறிப்பிட்டார். தாம் பதவிக்கு வந்த காலத்தில் இவ்வாறான பயிற்சிகளுக்கான

இந்தியாவின் ஒத்துழைப்பும், உதவியும் எப்போதும் எங்களுக்குத் தேவை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்

யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு 11.12.2024 அன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றது. உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை நிகழ்நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

யு.என்.டி.பி வதிவிட பிரதிநிதி வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் 11.12.2024 அன்று புதன் கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார். ‘தமிழர்களுக்கு என்று தனிச் சிறப்பான

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் – ஆளுநர் தெரிவிப்பு Read More »

தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் ஆளுநருடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 01.12.2024 ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பிலும் தமது திட்டமுன்மொழிவுகளை சமர்ப்பித்து ஆளுநருடன் கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில்

தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் ஆளுநருடன் கலந்துரையாடல் Read More »

குருநகரில் துறைமுகம் அமைப்பது தொடர்பில் ஆளுநர் கலந்துரையாடல்

குருநகர் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள இந்தப் பிரதேசத்துக்கான துறைமுகத்தை அமைப்பது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் ஊடாக கலந்துரையாடி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழா குருநகர் தொழிலாளர் இளைப்பாறு மண்டபத்தில் இன்று காலை 01.12.2024 நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, விவசாயம் மற்றும்

குருநகரில் துறைமுகம் அமைப்பது தொடர்பில் ஆளுநர் கலந்துரையாடல் Read More »

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை

வடக்கு மாகாணத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்புக்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தொடர்ச்சியான ஊக்குவிக்கும், கண்காணிப்பும் இருக்கவேண்டும். அதன் ஊடாக தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தொழில் முயற்சியாண்மை, ஆய்வு மற்றும் முன்னெடுப்புகளுக்கான ‘கேட்’ நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட வியாபார மேம்பாட்டு இணைப்பு அலகின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘வட

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான ஊக்குவிப்பு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »

எதிர்கால வெள்ளஇடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் – கௌரவ ஆளுநர் அதிகாரிகளிடம் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்தார். கௌரவ ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ். மாவட்டத்தின் இடர்நிலைமை மற்றும் எதிர்கால இடர்தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 28.11.2024 கடற்றொழில் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பந் துயகொத்தாவ, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின்

எதிர்கால வெள்ளஇடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் – கௌரவ ஆளுநர் அதிகாரிகளிடம் கோரிக்கை Read More »

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை 28.11.2024 இடம்பெற்றது. இதன்போதே ஆளுநர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில்

வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு Read More »