கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் மீது வடக்கு மக்கள் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (31.01.2025) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கௌரவ நாடாளுமன்ற […]
