Balasingam Kajenderan

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் விவசாய கண்காட்சியில் தெரிவிப்பு.

10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரியில் தொழில் முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாயக் கண்காட்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தற்கால மாணவர்கள் விவசாயக் கல்வி மற்றும் தொழிநுட்ப அறிவுடன் கூடிய சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என கூறியதோடு அதற்கான உந்துதலைக் கொடுப்பதற்கான சந்தர்ப்பமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இக்கண்காட்சி நடைபெறும் துணுக்காய், மல்லாவி பிரதேசமானது ஒரு பின்தங்கிய மற்றும் போரால் […]

தற்கால மாணவர்கள் சிறந்த விவசாயிகளாக உருவாக வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் விவசாய கண்காட்சியில் தெரிவிப்பு. Read More »

வடமாகாண சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவதானிப்பதற்காகவும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் சிறந்த எதிர்காலம் தெரிவதாகவும் பிரித்தானிய அமைச்சர் கூறியிருந்தார். இந்தச் சந்திப்பு 12 ஒக்ரோபர் 2023 அன்று யாழ்.நகரில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம்

வடமாகாண சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவதானிப்பதற்காகவும் வடமாகாண ஆளுநரைச் சந்திக்கவும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Read More »

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா.

கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க வடக்கு மாகாணத்தின் விவசாய திணைக்களம், கைத்தொழில் திணைக்களம், மீன்பிடி அலகு போன்றவற்றால் நடாத்தப்பட்ட தேசிய தொழிற்றகமை சான்றிதழ் பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்தவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் விழா வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் 2023.10.10 அன்று சாவகச்சேரி நகரசபை பொன்விழா மண்டபத்திலே நடைபெற்றது. இந்நிகழ்விலே கல்வி அமைச்சர் கலாநிதி. சுசில் பிரேம ஜெயந்த, மீன்பிடித்துறை அமைச்சர் திரு.டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண

கல்வி அமைச்சர் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் வெகுவிமர்சையாக நடைபெற்ற தேசிய தொழிற்றகமை சான்றிதழ் வழங்கும் விழா. Read More »

முல்லைத்தீவு மல்லாவி வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் தொழில்முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாய கண்காட்சி ஆரம்பமானது.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை அமைப்புகளிலும், அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கீடுகள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பாடசாலை தொழில்முனைவோர் தோட்டக்கலை நிகழ்ச்சித் திட்டத்தின் விவசாயக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் அதிபர்

முல்லைத்தீவு மல்லாவி வித்தியாலயத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையில் தொழில்முனைவோர் பாடசாலை தோட்ட வேலைத்திட்டத்தின் விவசாய கண்காட்சி ஆரம்பமானது. Read More »

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய மின்சார அமைப்பிற்கு தினமும் 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் சூரிய சக்தி மின் அமைப்பு ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்றினால் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என கூறப்படுகின்றது.  தனியார் சூரியப்படல நிறுவனம் ஒன்றின் தலைவர் திரு.ஜயந்த சமரகோன் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் பூநகரி ஏரியை அண்மித்த பகுதிகளில் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 1000 ஏக்கரில் 700 மெகாவோல்ட் சூரிய சக்தி மின் அமைப்பு

தேசிய மின்சார அமைப்பிற்கு தினசரி 6.5% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திட்டம் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. Read More »

இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர்.

கடந்த 07.10.2023 அன்று இந்திய துணைத்தூதரகத்தால் நடாத்தப்பட்ட இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் ‘இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டமானது, 400 இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு பல்வேறுபட்ட துறைகளான தகவல் தொழிநுட்பம், ஆங்கிலமொழி, முகாமைத்துவம், கிராமிய அபிவிருத்தி, நிதி, தொடர்பாடல் போன்றவற்றில் ஆற்றல் விருத்தியையும் பயிற்சிகளையும் வழங்குவது ஒரு பொன்னான வாய்ப்பு’ என கூறியதோடு இத்திட்டத்தை செயற்படுத்துகின்ற இந்திய

இந்திய தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாளில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார் கௌரவ வடக்கு மாகாண ஆளுநர். Read More »

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 03.10.2023 அன்று மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இந்நிகழ்வு வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தலைமையில் கௌரவ ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை

eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு Read More »

வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ். எம் சார்ள்ஸ் மற்றும் கெளரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (04.10.2023) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. சந்திப்பின்போது எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு தன் முழு ஆதரவையும் வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

வடமாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு Read More »

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் கெளரவ பி. எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் அக்டோபர் 03 ஆம் தேதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கெளரவ கோபால் பாக்லே அவர்களை  கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது கெளரவ ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதே வேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார். கௌரவ உயர் ஸ்தானிகர் அவர்கள்,  வடக்கு

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு Read More »

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை அண்மையில் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியது. 27-09-2023 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய வவுனியா பல்கலைக்கழக வேந்தருமான பேராசிரியர் மோகனதாஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தச் சந்திப்பில், மும்மத பிரதிநிதிகள்,

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு! மாகாண அபிவிருத்திசார் விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வு Read More »