அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு
அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (01.01.2025) இடம்பெற்றது. வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளரால், திணைக்கள ரீதியான செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால், வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பான தேவைப்பாடுகள், வைத்திய அதிகாரிகள் எதிர்நோக்குகின்ற சவால்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி, மன்னார், முல்லைதீவு மாவட்டங்களில் காணப்படும் ஆயுள்வேத வைத்தியசாலைகளில் வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாகவும் […]
