Balasingam Kajenderan

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித்தடத்தில் நேற்று சனிக்கிழமை (28.12.2024), சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்த தனியார் பேருந்து உரிமையாளரின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேநாயகன் அவர்களுக்கு அறிவித்துள்ளார். தனியார் பேருந்து மேற்படி வழித்தடத்தில் சாரத்திய நடைமுறைகளை மீறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பயணித்தமை தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கும் […]

தனியார் பேருந்தின் பயணிகள் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் Read More »

மார்கழி இசைவிழா – 2024

யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டு கலைக்கூடல் யாழ் வணிகர் கழகம் ஆகிய இணைந்து நடத்தும் மார்கழி இசைவிழா – 2024′ இன் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை (28.12.2024) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  

மார்கழி இசைவிழா – 2024 Read More »

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தால் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கான காணொலி வெளியீடு மற்றும் சிவாலயங்களின் வழித்தடம் கைநூல் வெளியீடு என்பன வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை மாலை (28.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களினதும் தனித்துவங்களை உள்ளடக்கி தனித்தனியான காணொலி மற்றும் மாகாணத்தின் ஈர்ப்புள்ள ஒவ்வொரு துறைகள் தொடர்பான காணொலி என்பன வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து வடக்கிலுள்ள முக்கிய 27 சிவாலயங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் தொகுக்கப்பட்டு

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்காக போக்குவரத்து வசதிகளை விரைவுபடுத்தி – விரிவாக்கும் நடவடிக்கைகளை இந்தியா விரைந்து முன்னெடுக்கும் என நம்புவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட சிற்றூர்தியின் வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்

ஆபத்தான பயணத்தை மேற்கொண்டமைக்கான காணொளி ஆதாரங்களுடன் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களினூடாகவும் வெளிவந்த செய்தி மற்றும் கௌரவ ஆளுநருடைய ஊடகப்பிரிவும் சுட்டிக்காட்டிய விடயம் தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் திரு.க.மகேஸ்வரன் அவர்களால் அறியத்தரப்பட்டுள்ளது. இது தொடர்பில், பயணிகள் சேவைக்காக யாழ்ப்பாணம் – பருத்தித்துறைக்கு 750 வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட 29 சிறி 7911 இலக்க சிற்றூர்த்தியின் உரிமையாளரின் வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் சாரதி,

ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட சிற்றூர்தியின் வழித்தட பயணிகள் சேவை அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் Read More »

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர்

தீவக மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை விரைவில் நாம் முன்னெடுக்க இருக்கின்றோம். இது தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனுடனும் கலந்துரையாடியிருக்கின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். பிரிட்டன் வாழ் புங்குடுதீவைச் சேர்ந்த நலன்விரும்பிகளால், வட இலங்கை சர்வோதய குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு வெள்ளிரும்பிலான குடிதண்ணீர் பவுசர் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (28.12.2024) புங்குடுதீவு புஸ்பா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. வடக்கு

தீவக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்- வட மாகாண ஆளுநர் Read More »

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா

டவர் மண்டப அரங்க மன்றத்தால் நடத்தப்படும் நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறியைப் பூர்த்தி செய்த தமிழ் மொழிமூலமான முதலாவது பிரிவு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை (28.12.2024) இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர்

நாடகமும் அரங்கக் கலைகளுக்குமான உயர் டிப்ளோமா பாடநெறி பட்டமளிப்பு விழா Read More »

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (எல்.டி.எஸ்.பி.) ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக் கொண்ட வளங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவேண்டும். அரச பணியாளர்கள் மக்களுக்கு விரைவான – அன்பான சேவையை முன்னெடுக்கின்றன ஆண்டாக 2025ஆம் ஆண்டு அமையவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (27.12.2024)

உள்ளூராட்சி அபிவிருத்தி உதவித் திட்டத்தின் முடிவுறுத்தும் நிகழ்வு Read More »

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு

நேர்மையில் உறுதியாக இருப்பவர்களுக்கு எப்போதோ அதற்குரிய வெகுமதி – உரிய இடம் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், திருவாகரன் அவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக பணியாற்றிய காலம் பொற்காலம் எனப் பாராட்டினார். வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளராக இருந்த சிவகுருநாதன் திருவாகரன் அவர்களின் மணிவிழாவும் சேவைநயப்பும் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் 27.12.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலராக திருவாகரன் அவர்கள் பணியாற்றிய காலம் பொற்காலம் என ஆளுநர் பாராட்டு Read More »

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை (24.12.2024) இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை – வட மாகாண ஆளுநர் Read More »