Balasingam Kajenderan

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார்.

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் சங்கத்தினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை (15.01.2025) இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொண்டனர். வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்கள் வரவுப் பதிவேட்டு இயந்திரத்தில் கையொப்பமிடுவது தொடர்பான விவகாரம் ஆராயப்பட்டு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைவாக தீர்வு காணப்பட்டது. மாதத்தில் 14 நாள்கள் வெளிக்கள கடமையில் ஈடுபடுவதுடன், பிரதி திங்கட் கிழமைகளில் […]

வடக்கு மாகாண விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாக பரிசீலிக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார். Read More »

வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்லை உதயசூரியன் கழகமும் இணைந்து நடத்திய வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (14.01.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் பல வகையான பட்டங்கள் மழைக்கு மத்தியிலும் போட்டியில் பங்கேற்றன. வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு ஆளுநர் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார். இங்கு

வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர சர்வதேச பட்டப்போட்டி Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் இந்த நாளில், வடக்கு மாகாணத்திலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தைப்பொங்கல் என்பது நன்றியுணர்வுக்கான பண்டிகை. சூரியனால் உயிர்வாழ்வதற்காகவும், விவசாயிகளின் அயராத முயற்சிகளுக்காகவும் நன்றி தெரிவிக்கும் தருணம் இது. இயற்கையை கடவுளாக வழிபடும் எங்கள் மரபின் அடிப்படையில் இந்தத் திருநாள் முக்கியம் பெறுகின்றது. எங்கள் பாரம்பரியங்களை ஊடுகடத்தும் வடிவிலும் இந்தத் தைப்பொங்கல் பண்டிகை சிறப்பானதாக அமைக்கின்றது. வடக்கு மாகாணத்தின் இரு கண்களாக விவசாயமும், மீன்பிடியுமே

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி Read More »

பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் – வடக்கு மாகாண ஆளுநர்

இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படவேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை (13.01.2025) இடம்பெற்றது. ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு

பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (11.01.2025) இடம்பெற்றது. கல்லூரியின் முதல்வர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், தலைமைத்துவம் முக்கியமானது. பாடசாலை ஒன்றின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதிபர் ஒருவரிலேயே தங்கியிருக்கின்றது. இதைப் பல பாடசாலைகளில் நாங்கள் காண்கின்றோம். இன்று எம்மவர்களிடையே தலைமைத்துவப் பண்பு குன்றிச் செல்கின்றது. அதை எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ளவேண்டும். நாங்கள் இன்றும் எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை மதிக்கின்றோம். அவர்களையே எங்களின்

மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »

யாழ். கல்விக் கண்காட்சி – 2025

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுட்டிக்காட்டினார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா 11.01.2025 அன்று சனிக்கிழமை காலை  வலம்புரி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் மற்றும் கௌரவ

யாழ். கல்விக் கண்காட்சி – 2025 Read More »

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது. நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை உரிமையாளர்களுடனான கலந்துரையாடலில் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும்

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவிற்கு கடன் வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் Read More »

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை

வடமாகாண மகளிர் விவகார அமைச்சானது மகளிர் விவகாரங்களுக்கான சேவை வழங்கல் பரப்புக்கள் மற்றும் திட்டமிடல் நுட்பங்கள் என்பனவற்றை முக்கியமான சமூகவியல் அம்சங்களாகக் கருதுவதனால், வடமாகாணத்தில் பாலின சமத்துவம் மற்றும் ஒப்புரவு ஆகியவற்றில் உள்ள ,டைவெளிகளை அறிந்து புதிய செயற்றிட்டங்களை உருவாக்கவும் பெண்களை வலுவூட்டுதல், பெண்களின் குரல் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்கான உலகளாவிய சிறந்த நடைமுறைகள் பற்றிய அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதற்காகவும் வடமாகாணத்தில் இந்த நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உள்ளுர் தடைகளை அடையாளம் காணுவதற்காகவும் பெண்களுக்கான சேவையை மேம்படுத்தி செயல்திட்டங்களை

மகளிர் விவகாரங்களுக்கான மகத்தான களப்பணி தொடர்பான பயிற்சிப்பட்டறை Read More »

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

வடமாகாண மகளிர் விவகார அமைச்சினால் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முன்னிலை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விளிம்பு நிலையிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் கடந்த வருடம் 12.12.2024 அன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் 18.12.2024 அன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 20.12.2024 அன்று மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் தீர்க்கமான பங்களிப்புடன்

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கல் வடமாகாணத்தில் மகளிர் விவகார அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு! Read More »

வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர்

வரியிறுப்பாளர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வைக்கும்போதுதான் அவர்கள் தாமாகவே முன்வந்து வரியைச்செலுத்துவார்கள். வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முதன் முதலாக உள்ளூராட்சிமன்றம் ஒன்று சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியின், வட்டாரம் -1 கம்பர்மலையில் 10.01.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. கரவெட்டி பிரதேச சபையின் செயலர் க.கம்சநாதன் தனது

வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »