மக்களின் மனங்களில் – எண்ணங்களில் – நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதே தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் அடிப்படையாகும். அதை இலக்காகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை காலை (03.02.2025) யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று அந்தப் பகுதிமக்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், தூய்மையான இலங்கை செயற்றிட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பது அதன் ஓர் அலகுதான். 1970ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தூய்மையான மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. அன்று பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை குறைவாக […]
